கலக்கொள்கை Theodor Schwann , Matthias Jakob Schleiden, Virchow ஆகிய மூன்று விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்ட கொள்கை.
இதில் 3 பிரதான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சகல அங்கிகளும் ஒன்று / பல கலங்களால் ஆக்கப்பட்டவை.
அங்கிகளின் அடிப்படைக் கட்டமைப்பு, அடிப்படை தொழிற்பாட்டு அலகு கலம் ஆகும்.
சகல கலங்களும் ஏற்கனவே காணப்பட்ட கலங்களிலிருந்து உருவாகின்றன.
கலக்கொள்கையில் பங்களிப்பு செய்த விஞ்ஞானிகள் பின்வருமாறு :
Robert Hooke (1663) : திண்மத் தன்மையான தக்கை நீரில் மிதப்பதற்கான காரணத்தை அறியும் பொருட்டு மெல்லிய வெட்டு முகங்களை நுணுக்குக்காட்டியின் கீழ் அவதானித்தார். அதன் போது தேன் கூட்டு அறைகள் போன்று துளைகள் கொண்ட அமைப்பு அவதானிக்கப்பட்டது. துளை ஒவ்வொன்றையும் கலம் எனப் பெயரிட்டார்.
Anton Van Leeuwan Hooke (1650) : நீர்த் துளியை நுணுக்குக்காட்டியின் கீழ் அவதானித்து தனிக்கல அங்கிகளான பற்றீரியா, இயூக்கிளினா ஆகியவற்றை முதன் முதலில் பதிவு செய்தார்.
Schleiden (1831) : இவர் தாவரவியலாளர். தாவர இழையங்களை நுணுக்குக்காட்டியின் கீழ் அவதானித்து சகல தாவரங்களும் கலங்களால் ஆனவை என முடிவு செய்தார்.
Schwann (1839) : விலங்கியலாளர். விலங்கு இழையங்களை ஆராய்ந்து அவை கலங்களால் ஆனவை என முடிவு செய்தார்.
Virchow (1855) : கலப்பிரிவு செய்முறையை ஆராய்ந்து எல்லா கலங்களும் ஏற்கனவே காணப்பட்ட கலங்களிலிருந்து கலப்பிரிவினால் உருவாகின்றது என முடிவு எடுத்தார்.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்