இல. 41, 42 ஆகிய வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
தொழிற்பயிற்சிப் பாடநெறியொன்றுக்கு ஆட்சேர்ப்பதற்காகப் பின்வரும் தகைமைகளைக் கொண்ட இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள தகவல்களின் படி,
விண்ணப்பதாரி எல்லாத் தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ளார் எனின் ………………….. a எனவும்
விண்ணப்பதாரி தகைமைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனின் …………………………………..b எனவும்
விண்ணப்பதாரிக்கு தகைமைகளைப் பூர்த்தி செய்வதற்கு பரீட்சைக்குத் தோற்ற
வேண்டியிருப்பின் ………………………………………………………………………………………………………….. c எனவும்
விண்ணப்பதாரி தாபன சபையின் இணக்கப்பாட்டினைப் பெற வேண்டுமாயின் ………… d எனவும்
முடிவெடுப்பதற்கு, தரப்பட்டுள்ள தரவுகள் போதாது எனின் …………………………………………… e எனவும் தெரிவு செய்க.
2000 ஜனவரி 01 ஆந் திகதி பிறந்த இலங்கையரான அருள், ஒரு தடவை மாத்திரம் க.பொ.த. (சாதாரண தர)ப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதோடு தமிழ்மொழி, சைவநெறி, வரலாறு, விஞ்ஞானம், ICT, கர்நாடக சங்கீதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தியுடன் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சாதாரண சித்தியைப் பெற்றுள்ளார்.