30 தொடக்கம் 32 வரையிலான வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
பாடசாலைத் தோட்டத்தில் பழமரங்களுக்குத் தடியால் அடித்து ஏழு மாம்பழங்களையும், ஐந்து
தோடம்பழங்களையும் நிலத்தில் வீழ்த்திய குற்றத்துக்காக ஐந்து மாணவர்களை அழைத்து அவ்வொவ்வொரு மாணவரும் பறித்த பழங்களின் எண்ணிக்கை குறித்து வினவிய போது அவர்கள் வழங்கிய பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அமல் – ஒரு மாம்பழமும் ஒரு தோடம்பழமும் மாத்திரம்
பவன் – இரண்டு மாம்பழங்களும் ஒரு தோடம்பழமும் மாத்திரம்
காசிம் – இரண்டு மாம்பழங்கள் மாத்திரம்
டேவிட் – ஒரு மாம்பழமும் இரண்டு தோடம்பழங்களும் மாத்திரம்
எமில் – ஒரு தோடம்பழம் மாத்திரம்
ஒருவர் மாத்திரம் பொய் சொல்கிறார் எனின், அவர் உண்மையில் ஒரு மாம்பழமும் ஒரு தோடம்பழமும் மாத்திரம் பறித்தார் எனின், அவர் யாராக இருக்க முடியும்?