எமது தொழிலின் இதயமும் ஆன்மாவும் நம்பகத்தன்மையாகும். நாம் பொதுமக்களுக்குச் சமூக ரீதியிலும் வாண்மைத் தொழில் ரீதியிலும் பொறுப்பான முகவராக இருப்பதன் மூலம் மாத்திரம் நம்பகத்தன்மையையும் மதிப்பையும் அதனுடன் கூடிய அதிகாரத்தையும் பெறுகிறோம். சில வழிகளில் பத்திரிகையாளர்களாகிய நாம் வங்கியில் தொழில் புரிபவர் பணம் தொடர்பாகக் கொண்டிருக்கும் அதே மனப்பாங்கை செய்திகள் தொடர்பாகக் கொண்டிருக்கிறோம். பணம் எமதன்று. நாம் அதை வேறு மக்களின் சார்பாகக் கையாளுகின்றோம். ஆகையால் அதனை எமது சொந்தத் தேவைக்கு மாற்ற முடியாது. நாம் அவ்வாறு செய்தால், அது கையாடலாகும். பின்வரும் விமர்சனங்களில் எது பத்திரிகையாளர்களுக்கும் வங்கித் தொழில் புரிபவர்களுக்குமிடையே உள்ள ஒப்பீட்டை மிகவும் வலுவிழக்கச் செய்கின்றது?