ACC-U11-75

Author : Admin

Topic updated on 05/01/2018 05:04pm

வரையறுத்த இந்திரா பொதுக் கம்பனியில் 31.03.2016 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக்கூற்றுகள் 15.06.2016 இல் இயக்குனர்களால் அதிகாரமளிக்கப்பட்டன. 31.03.2016 இலிருந்து 15.06.2016 வரையான காலப் பகுதிக்குள் கம்பனியில் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

A – 15.04.2016 இலிருந்து வியாபாரத்தின் ஒரு பகுதியை நிறுத்தும் திட்டத்திற்கான அறிவிப்பினை விடுத்தல். இதனால் வருடாந்தம் ரூ. 600 000 ஐ சேமிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
B – 20.04.2016 இல் பிரதான உற்பத்தி பொறி தீயினால் அழிக்கப்பட்டுள்ளது. அதனால் ரூ. 1 000 000 நட்டம்
ஏற்பட்டது.
C – 30.04.2016 இல் மேற்கொள்ளப்பட்ட கடன் விற்பனையினால் எழுந்த ரூ. 750 000 மீதியைக் கொண்ட
கடன்பட்டோரொருவர் 30.05.2016 இல் முறிவடைந்துள்ளார்.
D – 15.06.2016 இல் சாதாரண பங்குதாரர்களுக்கு ரூ. 300 000 இறுதி பங்கிலாபமாகப் பிரகடனப்படுத்தப்படல்.

LKAS 10 (அறிக்கையிடல் காலத்திற்குப் பின்னரான நிகழ்வுகள்) இதன்படி மேலே கூறப்பட்டுள்ள நிகழ்வுகளில் எவை 31.03.2016 இல் முடிவடைந்த வருடத்தில் சீராக்கம் செய்யத் தேவையற்ற நிகழ்வுகள் எனக் கருதப்படும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply