2011.03.31 இல் முடிவடைந்த நிதிக் கூற்றுகளில் கம்பனியொன்றின் இயக்குனர்கள் 2011.06.30 இல்
கையொப்பமிட்டுள்ளனர். நிதிக்கூற்றுக்கள் 2011.07.15 இல் இடம்பெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தில்
பங்குதாரர்களினால் அங்கீகரிக்கப்பட்டது. கீழ்வரும் நிகழ்வுகள் தொடர்பில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
A – வெள்ளம் காரணமாக 2011.05.20 இல் ரூ. 250 000 பெறுமதியான அலுவலக உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
B – 2009 இல் வாடிக்கையாளர் ஒருவரினால் கம்பனிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குத் தொடர்பில் 2011.06.15 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத் தீர்ப்பு ரூ. 150 000 இழப்பீட்டு பொறுப்பினை கம்பனிக்கு ஏற்படுத்தியுள்ளது.
C – 2011.03.31 இல் ரூ. 300 000 மீதியினை கொண்டுள்ள வாடிக்கையாளர் ஒருவர் 2011.07.05 இல் முறிவடைந்தவராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். கம்பனியானது ஐந்தொகை தினத்தன்று இத்தொகைக்கான முழு ஏற்பாட்டையும் ஏற்கனவே செய்திருந்தது.
மேலுள்ள நிகழ்வுகளில் எவைகளுக்கு 2011.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுகளில் சீராக்கம் தேவைப்படுகிறது?