பங்குடைமையொன்றினை அமல், விமல், சலீம் ஆகிய மூவரும் இலாப நட்டங்களை 2 : 2 : 1 எனும் விகிதத்தில் பகிர்ந்து நடாத்தினர். 31.03.2012 இல் சலீம் பங்குடைமையிலிருந்து விலகினார். அமலும் விமலும் இலாப நட்டங்களை 3 : 2 எனும் விகிதத்தில் பகிர்ந்து பங்குடைமையைத் தொடர்ந்து நடாத்தத் தீர்மானித்தனர். இத்தினத்தில் பங்குடைமையின் நன்மதிப்பு ரூபா 400 000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இது பங்காளர் மூலதனக் கணக்கினூடாகச் சீராக்கம் செய்யப்பட்டுள்ளது.
31.03.2012 இல் அமல், விமல் ஆகியோர்களது மூலதனக் கணக்குகளில் இந்த நன்மதிப்புச் சீராக்கத்தின் விளைவாக ஏற்பட்ட தேறிய தாக்கம் எவ்வளவு?