சிவம், பரம் ஆகிய இருவரும் இலாபநட்டங்களை முறையே 4 : 3 என்ற அடிப்படையில் பகிரும் பங்காளர்கள். இப்பங்குடமையிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை வருமாறு

2015.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான தேறிய இலாபம் ரூபா 240 000. மேற்தரப்பட்ட தகவல்களைக் கொண்டு பங்களார்கள் ஒவ்வொருவரினதும் 2015.03.31 இல் காணப்பட்ட மொத்த உரிமையாண்மைத் தொகையினைத் தெரிவு செய்க.

 

இலாப நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் அமலன், துமிலன் ஆகியோரின் பங்குடமையில் 2012.03.31 இல் முடிவடைந்த வருடத்தில் இலாபப்பகிர்வின் பின்னர் பின்வரும் வழுக்கள் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. அமிலன் எடுப்பனவு செய்த ரூ. 3 000 பெறுமதியான சரக்கிற்கு பதிவுகள் எதுவும் இடம்பெறவில்லை. துமிலன் தனது சொந்த பணத்திலிருந்து செலுத்திய வியாபாரத்திற்கான மின் கட்டணம் ரூ. 2 000 ஆனது கணக்கேடுகளில் ரூ. 200 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வழுக்களைத் திருத்திய பின்னர் பங்காளர் இருவரது உரிமையாண்மையில் ஏற்படும் தாக்கம் யாது?

 

ஞானம், வாசன் இலாப நட்டத்தை 2 : 1 விகிதத்தில் பங்கு கொள்ளும் பங்காளிகளாவார்கள் 2012 டிசம்பர் 31 இல் அவர்களின் நிலையான மூலதனம் மீது வருடாந்தம் 10% மூலதனவட்டி நடைமுறைக்கணக்கில் செலவு வைத்துள்ளனர். வாசனுக்கான வருடாந்த சம்பளம் ரூபா 33 000 நடைமுறைக் கணக்கில் செலவு வைக்கப்பட்டு இருந்தது. மூலதன மீதியும் நடைமுறை மீதியும் முறையே வருமாறு

ஆண்டுக் காலத்தில் வாசன் சம்பளம் ரூபா 12 000 எடுத்ததொகை வருமானக் கூற்றில் செலவாக கணக்கெடுக்கப்பட்டமை நடைமுறைக் கணக்கு மீதி எடுக்கப்பட்ட பின்னர் தெரிய வந்துள்ளது.
இத்தவறை திருத்திய பின்னர் பங்குடைமை வியாபாரத்தில் உழைக்கப்பட்ட இலாபமும் 2012.12.31 இல் வாசனின் நடைமுறைக் கணக்கு மீதியும் முறையே

 

கமல், விமல் ஆகியோர் தலா ரூபா 400 000 மூலதனத்துடன் போக்குவரத்துச் சேவையொன்றினை ஆரம்பிப்பதற்காக பங்குடைமை முயற்சியொன்றில் ஈடுபட்டு கனரக பேரூந்து ஒன்றினைக் கொள்வனவு செய்துள்ளனர். சேவையை ஆரம்பித்த மறுதினம் பேரூந்து துரதிஸ்ட வசமாக விபத்துக்குள்ளாகி முற்றாகச் சேதமடைந்தது. இவர்கள் இப்பேரூந்துக்கு முழுமையான காப்புறுதியினை மேற்கொள்ளாமல் மூன்றாம் நபர் காப்புறுதியினை மட்டும் செய்துள்ளனர். கமல், விமல் ஆகியோரின் இலாப நட்ட விகிதம் முறையே 2:1 ஆக இருந்தபோதிலும் விபத்தினால் ஏற்பட்ட நட்டம் ரூபா 1 200 000 ஆனது கமல், விமல் ஆகியோரிடையே முறையே ரூபா 400 000, ரூபா 800 000 எனப் பகிரப்பட்டுள்ளது.

இதற்கான வலுவான காரணமாகக் கருதக்கூடியது யாதெனில்

 

அன்பு, அறிவு, பண்பு பங்குடமை ஒன்றின் பங்காளர்கள் 31.03.2012 இல் முடிவுற்ற ஆண்டுக்கு பங்குடைமை உழைத்த தேறிய இலாபம் பங்காளரிடையே சமனாகப் பகிரப்பட்ட பின் மூலதனக் கணக்கு மீதிகள் முறையே ரூபா 350 000இ ரூபா, 250 000, ரூபா 150 000 ஆக இருந்தது. 01.04.2011 இல் பங்குடைமையின் தேறிய சொத்துக்கள் ரூபா 600 000 ஆகக் காணப்பட்டது. 31.03.2011 வரை பங்காளரிடையே உடன்படிக்கை ஏதும் இருக்கவில்லை. 01.04.2011 தொடக்கம் பின்வரும் உடன்படிக்கை பங்காளரிடையே ஏற்பட்டிருந்தது.

  • வருட ஆரம்ப மூலதன மீதிகளுக்கு 10% வட்டி
  • பங்காளர் அன்பு, அறிவு இற்கு வருடாந்த சம்பளம் முறையே ரூபா 20 000 , ரூபா 10 000 அனுமதிக்கப்படும். மீதியாக உள்ள இலாபம் சமனாக பங்காளரிடையே பகிரப்படும்.

31.03.2012 இல் முடிவுற்ற ஆண்டுக்கு பங்காளர் ஒவ்வொருவரினதும் பங்குடைமையிலிருந்தான வருமானம் முறையே

 

கீதா, சீதா ஆகியோர் முறையே ரூபா 400 000 ரூபா 300 000 மூலதனமாக இட்டு ரூபா 1 000 000 செலவில் கட்டடமொன்றை அமைத்து வாடகைக்கு விடப்பட்டிருந்தது தொடர்பில் ரூபா 300 000 வங்கிக்கடன் பொறுப்பொன்றினையும் கொண்டிருந்தனர். பின்னர் ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றில் கட்டிடம் முற்றாகச் சேதமுற்றது. தற்போது வங்கியின் பொறுப்பினைத் தீர்ப்பதில் கீதா, சீதா ஆகியோரின் பங்களிப்பு முறையே

 

முடிவடைந்த வருடத்திற்கான கமல், விமல், சமல் பங்குடைமை வணிகத்தின் தகவல்களின் சில வருமாறு
A – கமலின் வருடாந்த சம்பளம் ரூபா 30 000
B – குறித்த வருடத்தில் கமலுக்கு காசாக செலுத்திய சம்பளம் ரூபா 18 000
C – கமல், விமல், சமல் என்பவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட இறுதிப் பங்கிலாபம் முறையே ரூபா 50 000, ரூபா 50 000, ரூபா 25 000
D – விமல், சமல் என்போரின் பொருள் பற்று முறையே ரூபா 10 000, ரூபா 5 000 ஆக இருந்ததுடன் இது தொடர்பில் எவ்வித பதிவும் செய்யப்படவில்லை.
E – விமலுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி ரூபா 25 000 இற்கு எவ்வித பதிவுகளும் செய்யப்படவில்லை.

மேற்தரப்பட்ட சகல தகவல்களையும் கவனத்தில் கொண்ட பின்னர் 2015.03.31 ஆம் திகதியில் முடிவடைந்த வருடத்தில் பங்குடைமை வணிகத்தின் உரிமையில் ஏற்பட்ட அதிகரிப்புத் தொகையாக இருப்பது யாது?

 

முடிவடைந்த வருடத்திற்கான கமல், விமல், சமல் பங்குடைமை வணிகத்தின் தகவல்களின் சில வருமாறு
A – கமலின் வருடாந்த சம்பளம் ரூபா 30 000
B – குறித்த வருடத்தில் கமலுக்கு காசாக செலுத்திய சம்பளம் ரூபா 18 000
C – கமல், விமல், சமல் என்பவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட இறுதிப் பங்கிலாபம் முறையே ரூபா 50 000, ரூபா 50 000, ரூபா 25 000
D – விமல், சமல் என்போரின் பொருள் பற்று முறையே ரூபா 10 000, ரூபா 5 000 ஆக இருந்ததுடன் இது தொடர்பில் எவ்வித பதிவும் செய்யப்படவில்லை.
E – விமலுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி ரூபா 25 000 இற்கு எவ்வித பதிவுகளும் செய்யப்படவில்லை.

2015.03.31 ஆம் திகதியில் முடிவடைந்த வருடத்தின் சரியான தேறியலாபம் யாது?

 

முடிவடைந்த வருடத்திற்கான கமல், விமல், சமல் பங்குடைமை வணிகத்தின் தகவல்களின் சில வருமாறு
A – கமலின் வருடாந்த சம்பளம் ரூபா 30 000
B – குறித்த வருடத்தில் கமலுக்கு காசாக செலுத்திய சம்பளம் ரூபா 18 000
C – கமல், விமல், சமல் என்பவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட இறுதிப் பங்கிலாபம் முறையே ரூபா 50 000, ரூபா 50 000, ரூபா 25 000
D – விமல், சமல் என்போரின் பொருள் பற்று முறையே ரூபா 10 000, ரூபா 5 000 ஆக இருந்ததுடன் இது தொடர்பில் எவ்வித பதிவும் செய்யப்படவில்லை.
E – விமலுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி ரூபா 25 000 இற்கு எவ்வித பதிவுகளும் செய்யப்படவில்லை.

மேற்காட்டிய உருப்படிகளில் எவ்வுருப்படிகள் பங்காளர்களிடையே கொள்ளப்படுகின்ற இலாபநட்ட பகிர்வாகக் கருதப்படும்?

 

A, B, C ஆகியோர் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாபநட்டங்களை பகிரும் பங்குடைமையிலிருந்து C இளைப்பாற ஏனைய பங்காளர்கள் இலாப நட்டத்தை சமமாகப் பகிர்வர். அன்றைய தினம் நன்மதிப்பு ரூபா 60 000 ஆக மீள் மதிப்பீடு செய்யப்பட்டது. நன்மதிப்பு கணக்கில் ரூபா 30 000 மீதி காணப்பட்டது. C ஓய்வு பெற்ற தினத்திலிருந்து நன்மதிப்பு கணக்கினைப் பேணுவதில்லை எனப் பங்காளர் தீர்மானித்தார். மேற்கூறிய நிகழ்வினால் பங்காளரின் மூலதன கணக்கு
மீதிகளில் ஏற்படும் தேறிய தாக்கம் யாது?