நிறுவனம் ஒன்றின் நிதிவருடம் 31.03.2011 இல் முடிவடைகிறது. நிதிக்கூற்று சமர்ப்பிப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட திகதி 30.05.2011 ஆகும். பின்வரும் நிகழ்வுகள் உமக்கு தரப்படுகிறது.
A- 20.03.2011 இல் நடைபெற்ற கடன் விற்பனை காரணமாக 31.03.2011 இல் கடன்பட்டோரில் உள்ளடக்கப்பட்ட ரூ. 150 000 வருமதிக்குரிய வாடிக்கையாளர் ஒருவர் 20.04.2011 இல் இறந்துள்ளார்.
B – 25.02.2011 இல் இடம்பெற்ற கடன் விற்பனை காரணமாக 31.03.2011 கடன்பட்டோரில் உள்ளடக்கப்பட்ட ரூ. 250 000 இற்குரிய வருமதியாளர் ஒருவர் 05.06.2011 இல் இறந்துள்ளார்.
C – 05.04.2011 இல் இடம் பெற்ற கடன் விற்பனை தொடர்பில் ரூ. 350 000 இற்குரிய வருமதியாளர் ஒருவர் 15.04.2011 இல் இறந்துள்ளார்.
D – 15.03.2011 இல் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்து தொடர்பில் வழக்கு ஒன்று நடைபெறுகிறது. இம்மோட்டார் வாகன விபத்து தொடர்பில் 20.05.2011 இல் ரூ. 250 000 நட்ட ஈடாக கம்பனி செலுத்தியது.
E – 04.04.2011 இல் நடைபெற்ற தீ விபத்தில் ஒரு தொழிற்சாலை முற்றாக சேதமடைந்தது. இதனால் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வுகளில் நிதிக்கூற்றில் சீராக்கம் செய்யப்பட வேண்டியவை எவை?
கம்பனியொன்றின் நிதிக் கூற்றுக்களினை சமர்பிப்பதற்கு அதிகாரமளிக்க முன்னர் ஆனால் நிதிக்கூற்றுத் தினத்திற்குப் பின்னர் வெளிப்படுத்தப்பட்ட உரிமைப்பங்குகளுக்கான பங்கிலாபங்களானவை நிதிக் கூற்றுத்தினத்தில் பொறுப்பொன்றாக
இனங்காண்பதில்லை.இக்கூற்றினைப் பின்வருவனவற்றுள் எது நியாயப்படுத்துகிறது
வரையறுத்த சில்வா பொதுக் கம்பனியின் முகாமையானது 31 மார்ச் 2015 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களை 31 மே 2015 இல் தயாரித்துள்ளது. இயக்குனர் சபையானது அவைகளை 20 யூன் 2015 இல் மீளாய்வு செய்து 25 யூன் 2015 இல் நிதிக்கூற்றுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். இவைகள் 10 யூலை 2015 இல் நிதிக் கூற்றுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். இவைகள் 10 யூலை 2015 இல் பங்குதாரர்களிற்கு கிடைக்கக் கூடியதாக விடப்பட்டுள்ளதுடன்
பங்குதாரர்கள் 25 யூலை 2015 இல் அவைகளுக்கு அங்கீகாரமளித்துள்ளனர். இலங்கை கணக்கீட்டு நியமம் 10 இன் படி வரையறுத்த சில்வா பொதுக் கம்பனியின் அறிக்கையிடும் தினத்திற்குப் பின்னர்
இடம்பெறும் நிகழ்வுகளை அடையாளம் காண்பதற்குப் பிரயோகிக்கக்கூடிய கால எல்லை எது?
கம்பனியொன்றின் கணக்காண்டு 31.03.2014 இல் முடிவடைந்தது. இயக்குனர்கள் நிதிக் கூற்றுகளை வழங்குவதற்கு 30.06.2014 இல் அதிகாரமளித்திருந்தனர். கம்பனியின் வருடாந்த பொதுக்கூட்டம் 15.07.2014 இல் இடம்பெற்றது. கம்பனி தொடர்பான பின்வரும் நிகழ்வுகள் 31.03.2014 இற்குப் பின்னர் இடம்பெற்றுள்ளன.
A – 31.03.2014 இல் உள்ளவாறான ரூ. 500 000 மீதியுடைய கடன்பட்டோர் ஒருவர் 30.04.2014 இல் முறிவடைந்தவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.
B – 31.03.2014 இல் ரூ. 800 000 மீதியுடைய கடன்பட்டோர் ஒருவர் 10.07.2014 இல் முறிவடைந்தவராகப்
பிரகடனப்படுத்தப்பட்டார்.
C – 31.03.2014 இல் உள்ளவாறான ரூ. 600 000 கிரயத்தில் மதிப்பிடப்பட்ட சரக்கிருப்பானது 10.04.2014 இல் ரூ. 550 000 இற்கு விற்கப்பட்டது.
D – முதலீடுகளின் சந்தைப் பெறுமதியானது 30.04.2014 இலிருந்து 30.06.2014 வரையிலான காலப்பகுதியில் ரூ. 300 000 இனால் குறைவடைந்தது.
மேற்படி நிகழ்வுகளில் 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுகளில் சீராக்கம் செய்ய வேண்டியவை எவை?
இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்யப்படும் போது அதன் பயன்படு ஆயுட்காலம் 8 வருடம் என மதிப்பிடப்பட்டது. இரண்டு வருடம் பயன்படுத்திய பின்னர் அதன் ஆயுட்காலம் இன்னும் 4 வருடம் மட்டுமே என மதிப்பிடப்பட்டது. இம்மாற்றம்
இலங்கை கணக்கீட்டு நியமம் இல. 16 இன்படி ஆதனம், பொறி மற்றும் உபகரணம் போன்ற சொத்துக்களின் பயன்தரு ஆயுட்காலத்தில் மாற்றம் என்பது
கணக்கீட்டுக் கொள்கை, கணக்கீட்டு மதிப்பீட்டு மாற்றம் மற்றும் வழுக்கள் தொடர்பான நியமத்திற்கு (LKAS 8) ஏற்ப பின்வருவனவற்றுள் மதிப்பீட்டு மாற்றங்களாக குறிப்பிடக்கூடிய கூற்றுகள் எவை?
A – கடந்த வருடமொன்றில் பதிவழிக்கப்பட்ட ரூ. 50 000 கடன்பட்டோரின் கடன் தொகையொன்று நடப்பாண்டில் கிடைக்கப் பெறல்.
B – இருப்பு மதிப்பீட்டு முறையாகிய FIFO (முதல் வந்தது முதல் செல்லல்) முறைக்குப் பதிலாக நடப்பாண்டில் (நிறையிடப்பட்ட சராசரி முறை) WAC பயன்படுத்தப்படல்.
C – நடைமுறையாண்டில் இருந்து ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் பெறுமானத் தேய்வானது நேர்கோட்டு முறையிலிருந்து ஒடுங்குபாக முறைக்கு மாற்றப்படுதல்.
D – கட்டடம் நவீனமயப்படுத்தல் காரணமாக அதன் பயன்பாடு ஆயுட்காலம் 10 வருடங்களிலிருந்து 12 வருடங்கள் வரை அதிகரித்திருப்பதாக தீர்மானிக்கப்படல்.
மேற்குறிப்பிட்டவைகளில் மதிப்பீட்டு மாற்றங்களாக குறிப்பிடக்கூடியன:
LKAS 1 (நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்) இன்படி 31.03.2016 இல் முடிவடைந்த வருடத்திற்கான மொத்த
முற்றுமடங்கிய வருமானம் மற்றும் நிறுத்தி வைத்த வருவாய் யாது?
கீழே தரப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் எது இரண்டு ஐந்தொகைத் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்கு இடையிலான நிதி நிலைமை மாற்றத்தினை அறிவதற்குத் தயாரிக்கப்படுகின்றது.
A. கிரயக்கூற்று
B. வருமானக்கூற்று
C. காசுப்பாய்ச்சல்
D. உற்பத்திக்கணக்கு
LKAS 1 (நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்) இன்படி 31.03.2016ல் முடிவடைந்த வருடத்திற்கான இலாபம் மற்றும் ஏனைய முற்றுமடங்கிய வருமானம் யாவை?