






















- பொருளாதார வளங்களை பயன்படுத்தி பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்யும் ஒரு அலகு நிறுவனம் ஆகும்.
- அவ்வுற்பத்தி நிறுவனங்கள் உருவாகியிருக்கும் பல்வேறான அமைப்புகள் பின்வரும் அடிப்படையில் அமைகின்றது:
- தனி வியாபாரம்
- பங்குடைமை வியாபாரம்
- கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள்
- கூட்டுறவு அமைப்புகள்
- அரச முயற்சிகள்
- உள்ளீட்டுக்கும் வெளியீட்டுக்குமிடையிலான தொடர்பு உற்பத்தி தொழிற்பாடு என்ற கோட்பாட்டின் மூலம் காண்பிக்கப்படுகிறது.
- அதனை பின்வரும் சமன்பாட்டின் மூலம் காட்டமுடியும்:
Q = F (L, K)
- Q = உற்பத்தி
- F = தொழிற்பாடு
- L = உழைப்பு (மாறும் காரணி)
- K = மூலதனம் (நிலையான காரணி)
- உற்பத்தியின் தன்மையின் மீது குறுங்காலமும் நீண்டகாலமும் தீர்மானிக்கப்படும்.






















நாணயகொள்கையை நடைமுறைப்படுத்தல்
பணநிரம்பல் வட்டிவீதம் கடன்களின் அளவு என்பவற்றை நெறிப்படுத்துவதன் மூலம் பேரின பொருளாதார குறிக்கோள்களை அடைதல் ஆகும்.
இது அரசின் சார்பில் மத்திய வங்கியால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நடைமுறைப்படுத்தப்படும் வழிமுறைகள்:
- தொகைக்கடன் கட்டுப்பாடு
- அளவுக்கடன் கட்டுப்பாடு
தொகைக்கடன் கட்டுப்பாடு
நாட்டின் அனைத்து வகையான கடன்களையும் மாற்றியமைக்கக் கூடிய ஒரு கடன் கட்டுப்பாட்டு முறையே இது ஆகும்.
இதற்காக மத்திய வங்கி கையாளும் கருவிகள்:
1. கொள்கை வட்டி வீதம்
2. நியதி ஒதுக்கு வீதம்
3. திறந்த சந்தை நடவடிக்கை
கொள்கை வட்டி வீதம்
நாட்டின் நாணயகொள்கையை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் மத்திய வங்கி வணிக வங்கிகளுடன் மேற்கொள்கின்ற கொடுக்கல் வாங்கல்களின் போது கையாளும் வட்டி வீதம் ஆகும்.
கொள்கை வட்டி வீதத்திற்கும் பொதுமக்களுமிடையே நேரடி தொடர்பில்லை; ஆனால் கொள்கை வட்டி வீதத்தில் ஏற்படும் மாற்றம் கடன்களுக்கான வட்டிவீதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதால் அது மொத்த கேள்வியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இது 3 வகைப்படும்.
- வங்கி வீதம்
- மீள் கொள்வனவு வீதம்
- மீள் விற்பனை வீதம்
வங்கி வீதம்
வணிக வங்கிகள் மத்திய வங்கியிடம் பெறுகின்ற கடன்களுக்காக மத்திய வங்கியால் அறவிடப்படும் வட்டி வீதம் ஆகும்.
இதனை மாற்றுவதன் மூலம் நாட்டின் பணநிரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
மீள் கொள்வனவு வீதம்
இணங்கப்பட்ட திகதியில் இணங்கப்பட்ட பெறுமதிக்கு மீள கொள்வனவு செய்யப்படும் என்ற உத்தரவாதத்துடன் மத்திய வங்கியானது வணிக வங்கிகளுக்கு அரச பிணையங்களை விற்பனை செய்து கடன்களை கொள்வனவு செய்யும் வீதம் ஆகும்.
அழைப்புக்கடன் சந்தையில் வட்டி வீத செல்வழி தீர்மானிக்கப்படும் போது அதன் கீழ் எல்லை வீதமாக மீள்கொள்வனவு வீதம் தீர்மானிக்கப்படும்.
பணச்சந்தையில் திரவ மிகை உள்ள போது அதனை ஈர்க்கும் நோக்கில் மத்திய வங்கி நாளாந்தம் மீள்கொள்வனவு ஏலங்களை நடாத்தும்.
மீள் விற்பனை வீதம்
இணங்கப்பட்ட திகதியில் இணங்கப்பட்ட பெறுமதிக்கு மீள விற்பனை செய்யப்படும் என்ற உத்தரவாதத்துடன் மத்திய வங்கியானது வணிக வங்கிகளிடமிருந்து அரச பிணையங்களை கொள்வனவு செய்து கடன்களை விற்பனை செய்யும் வீதம் ஆகும்.
அழைப்புக்கடன் சந்தையில் வட்டி வீத செல்வழி தீர்மானிக்கப்படும் போது அதன் மேல் எல்லை வீதமாக மீள்கொள்வனவு வீதம் தீர்மானிக்கப்படும்.
பணச்சந்தையில் திரவ பற்றாக்குறை உள்ள போது அதனை ஈடுசெய்யும் நோக்கில் மத்திய வங்கி நாளாந்தம் மீள் விற்பனை ஏலங்களை நடாத்தும்.
நியதி ஒதுக்கு வீதம்
வணிக வங்கிகள் தம்மிடம் வருகின்ற வைப்புக்களில் ஒதுக்காக பேணி வைத்திருக்க வேண்டிய அளவு ஆகும்.
இதனை மாற்றுவதன் மூலம் நாட்டின் பணநிரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
திறந்த சந்தை நடவடிக்கை
திறந்த சந்தையில் மத்திய வங்கியானது அரச பிணையங்களை கொள்வனவு, விற்பனை செய்தலாகும்.
அளவுக்கடன் கட்டுப்பாடு
தெரிவு செய்த துறைகளுக்கான ஒரு கடன் கட்டுப்பாட்டு முறையே இது ஆகும்.
கையாளும் கருவிகள்:
- கடன்பத்திரங்கள் மீது காசெல்லை வீதங்களை நிர்ணயித்தல்.
- கடன் தலைப்புக்கள் மீது உயர் கட்டுப்பாட்டுகளை நிர்ணயித்தல்.
- கடன் பிணைகளை மாற்றியமைத்தல்.
- நல்லொழுக்க கட்டுப்பாட்டு முறை
- முன்னுரிமை வட்டி வீத நிர்ணயம்
பணவீக்க இடைவெளி- பணச்சுருக்க இடைவெளி
நாடொன்றில் நிறைதொழில்மட்டம் நிலவும்போது தோன்றும் மொத்த நிரம்பலுக்கு தேவையான அளவை விட அப்பொருளாதாரம் கூடுதலாக செலவிடும் போது மொத்த கேள்வி மட்டம் பெருகுவதால் தோன்றுவதே பணவீக்க இடைவெளி ஆகும்.
இதன் போது மெய்யான GDP அதிகரிக்காத நிலையில் கேள்வி மட்டம் கூடுவதால் கேள்வி தூண்டல் பணவீக்கம் ஏற்படும்.
மாறாக நாடொன்றில் நிறைதொழில்மட்டம் நிலவும் போது தோன்றும் மொத்த நிரம்பலுக்கு தேவையான அளவை விட அப்பொருளாதாரம் குறைவாக செலவிடும் போது மொத்த கேள்வி மட்டம் குறைவதால் தோன்றுவதே பணச்சுருக்க இடைவெளி ஆகும்.
இதன் போது திட்டமிடாத கையிருப்புக்கள் தோன்றுவதால் மெய்யான GDP குறைய வேலையின்மை ஏற்படும்.






நிலைபேண்தகு அபிவிருத்தி
ஒரு நாட்டின் சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகிய மூன்று பக்கங்களிலும் ஏற்படும் சமமான விருத்தி ஆகும்.
இதன் நோக்கம் :
- சூழல் பாதுகாப்பு
- இயற்கை வள பாதுகாப்பு
- எதிர்கால சந்ததியினரின் சுபீட்சம் பாதுகாக்கப்படல்.
இதற்கு தடையாக அமையும் காரணிகள்
- வளங்களின் மிகை பயன்பாடு
- இயங்கை அனர்த்தங்கள், காலநிலை மாற்றம்
- ஓசோன் படையில் துவாரம் ஏற்படல்
- வளி மண்டலம் வெப்பமாதல்
- பனிமலை உருகுதல்
- காடழிப்பு, நீர் மாசுபடல்
இதற்கு அவசியமான மூலதன வகைகள்
- இயற்கை மூலதனம்
- நிலையான மூலதனம்
- மனித மூலதனம்
- சமூக மூலதனம்
இதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
- பொலித்தீன் பாவனையை தடுத்தல்.
- செயற்கை காடுகளை உருவாக்கல்.
- சூழல் மாசடைவுக்கு எதிராக சட்டங்கள் உருவாக்கப்படல்.
- மோட்டார் வாகன புகையைக் கட்டுப்படுத்தல்.
- CFC வாயு பாவனையைத் தடுத்தல்.
- தேசியக் கணக்குகளால் வெளிப்படுத்தப்படும் தரவுகள் பொருளாதார முகாமைத்துவத்துக்கு அவசியமாகும்.
- விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளை மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளடக்குகின்றது.
- இத்துறைகளினால் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் செய்யப்படும் சார்புரீதியான பங்களிப்பின் முக்கியத்துவப்படி பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்களை விளக்க முடியும்.
- மொத்த உள்நாட்டு உற்பத்தியின் துறைரீதியான பங்களிப்பைக் கருத்திற் கொண்டு சார்புரீதியாக பலவீனமான துறைகளை மேலெழச் செய்வதற்காக கொள்கையாக்கங்களைச் செய்யமுடியும்.
- உற்பத்திக் காரணிகளிடையே வருமானம் பங்கிடப்படும் விதம் தேசிய கணக்குத்தரவுகளின் மூலம் காட்டப்படுகிறது.
- தேசியக் கணக்குப் புள்ளி விபரங்களைப் பயன்படுத்தி ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையை மதிப்பிடல் மற்றும் சர்வதேச ஒப்பீடுகளைச் செய்யமுடியும்.
- தேசிய வருமானம் / உற்பத்தியை நாட்டின் நட்டாண்டுச் சனத்தொகையால் பிரிப்பதன் மூலம் தலா நபர் வருமானத்தைப் பெறமுடியும்.
- நிலையான விலைகளின் கீழ் மொத்தத் தேசிய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார வளர்ச்சியை அளவிடலாம்.
அரசியல் கல்வியை கற்பதன் பயன்கள்















- பிரஜைகளுக்கு அரசியல் விழுமியங்களை, அரசியல் ஆளுமைகளை வழங்குவதன் மூலம் அவர்கள் மிகச்சிறந்த அரசியல் உயிரியாக திகழ்வதற்கு அரசியல் கல்வி வழிகாட்டுகிறது.
- அரசியல் கல்வி பிரஜைகளுக்கு தம்மைப் பற்றியும் தம் உரிமை பற்றியும் கடமை பற்றியும் பொறுப்புக்களைப் பற்றியும் அறிவூட்டுகின்றது. இதன் மூலம் மிகச்சிறந்த சமூக வாழ்வை அனுபவிப்பதற்கு அது வழிகாட்டுகிறது.
- வேறுபட்ட அரசாங்கமுறை பற்றியும், ஆட்சிமுறை பற்றியும் அரசியல் கல்வி பிரஜைகளுக்கு போதிக்கிறது. இதன்மூலம் மக்கள் தமது சமூக சூழ்நிலைக்கு பொருத்தமான ஆட்சி முறையை தெரிவு செய்ய அரசியல் கல்வி வழிகாட்டுகிறது.
- அரசியல் கல்வி பிரஜைகளுக்கு பிரதிநிதித்துவ முறைமை பற்றியும், தேர்தல் நடைமுறை பற்றியும் கற்றுக் கொடுக்கிறது. இதனால் பிரதிநிதித்துவ முறையை விளங்கிக் கொண்டு சிறந்த முறையில் வாக்களிக்கவும் பிரதிநிதித்துவ முறையை தெரிவு செய்யவும் அரசியல் கல்வி வழிகாட்டுகிறது.
- பிரஜைகளை அரசியல் சமுதாயப்படுத்தலுக்கு உட்படுத்துகிறது. அதாவது அரசியல் செயற்பாடுகளிலே பங்குபற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் பங்குபற்றுவதன் மூலம் உருவாகக்கூடிய சமூக விளைவுகளைப் பற்றியும் அறிவூட்டுவதன் மூலம் அரசியல் சமுதாயப்படுத்தல் பணியை அரசியல் கல்வி முன்னெடுக்கிறது.
- அரசியல் கல்வி பிரஜைகளுக்கு சட்டம் பற்றிய போதனையை மேற்கொள்கிறது. சட்டத்தைப் போதிப்பதன் மூலம்பிரஜைகள் சிறந்த சட்டத்தரணியாக உருவாவதற்கு, சட்ட ஆலோசகர்கள் சட்டமேதைகளாக விளங்கவும் அரசியல் கல்வி துணைபுரிகிறது.
- அரசியல் கல்வியானது பொது நிர்வாகம் பற்றி போதிக்கிறது. இதன்மூலம் பிரஜைகள் மிகச்சிறந்த பொது நிர்வாகிகளாக உருவாவதற்கும், சமூகத்திலும் நாட்டிலும் நிர்வாக சேவையிலே இணைந்து பணியாற்றுவதற்கும் அரசியல் கல்வி வழிகாட்டுவதாக அமைகிறது.
- அரசியல் வாதிகளின் சொல்லையும் செயலையும் சீர்தூக்கிப் பார்த்து கொள்வதற்கும் எதிர்கால அரசியல் தலைமைத்துவம் தொடர்பான முடிவை மேற்கொள்ளவும் அரசியல் கல்வி உதவுகிறது.
- இன்றைய உலகமயமாதல் சூழலிலே ஒவ்வொரு பிரஜைகளும் சர்வதேச பிரஜைகள் என்ற நிலையைப் பெறுகின்றனர். அவர்கள் சிறந்த சர்வதேச பிரஜையாக வாழ்வதற்கு அரசியல் கல்வி அறிவூட்டுகிறது.






பொருளாதார அபிவிருத்தி
மனித வாழ்வின் பொருளாதார நிலைமை, தர ரீதியான தன்மைகளை மேம்படுத்தல் ஆகும்.
பொருளாதார வளர்ச்சி – பொருளாதார அபிவிருத்தி தொடர்பு
- பொருட்கள் சேவைகளின் தொகை ரீதியான அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சி.
- அத்துடன், தர ரீதியான அதிகரிப்பு ஒன்று காணப்பட்டாலே பொருளாதார அபிவிருத்தி.
- எனவே, பொருளாதார வளர்ச்சி பொருளாதார அபிவிருத்தியின் ஆரம்ப படிமுறை ஆகும்.
பொருளாதார அபிவிருத்திக்கு பொருளாதார வளர்ச்சியுடன் தேவையான நிபந்தனைகள்
- வாழ்க்கைத் தரம் அதிகரித்தல், வறுமை குறைதல்.
- நியாயமான வருமானப் பங்கீடு
- சமமான பிராந்திய வளர்ச்சி
- நல்லாட்சி
- பொருளாதார, சமூக, அரசியல் உறுதிப்பாடு
- உற்பத்தித் திறன் அதிகரிப்பு
- உட்கட்டமைப்பு வசதி
- சூழல் பாதுகாப்பு
பொருளாதார அபிவிருத்தியை அளவிடப் பயன்படும் சுட்டெண்கள்
- தனிநபர் GDP
- சார்பு வருமான பரம்பல்
- ஆயுள் எதிர்பார்க்கை
- கினி குணகம்
- ஊழிய பங்கு கொள் வீதம்
- பௌதீக வாழ்க்கைப் பண்புச் சுட்டி
- மனிதவள அபிவிருத்திச் சுட்டி
- மானிட வறுமைச் சுட்டி
- பல்பரிமாண வறுமைச் சுட்டி
பொருளாதார பன்முகப்படுத்தல் உபாயங்கள்
நிலையான பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தியினை அடைய இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் மையத் திட்டங்கள் ஆகும்.
அவையாவன :
- கடல்கள் மையம்
- விமான போக்குவரத்து மையம்
- வர்த்தக, சுற்றுலா மையம்
- அறிவு மையம்
- வலுமையம்






அரசாங்க அதிகாரம்
- கோட்பாட்டு ரீதியாக அரசாங்கத்திற்கன்றி அரசுக்கே இறைமை அதிகாரம் உரித்தாகின்றது. ஆனால் நடைமுறையில் அரசின் சார்பாக அரசாங்கமே அவ்வதிகாரத்தை பிரயோகிக்கின்றது.
- அரசுக்கு உரித்தான இறைமை அதிகாரத்தை அரசின் சார்பாக அரசாங்கம் பிரயோகிப்பது அரசாங்க அதிகாரம் எனப்படுகின்றது.
- இறைமை அதிகாரத்தின் உரிமையாளன் என்ற வகையில் உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் இவ்வதிகாரத்தை அரசாங்கமே பிரயோகிக்கின்றது.
அரசாங்க அதிகாரம் பிரயோகிக்கும் வழிமுறைகள்
- அரசாங்கத்தின் அதிகாரம் சட்டமுறையானது என மக்களை நம்பச் செய்வதன் மூலமாகும்.
- அச்சுறுத்தல் மற்றும் சன்மானம் வழங்குதல் மூலமாகும்.
- அதிகாரத்தை பிரயோகிப்பதன் மூலமாகும்.
- தண்டிப்பதன் மூலமாகும்.
அரசாங்கம் அதிகாரத்தை பிரயோகிக்கும் கருவிகள்
- காவல்துறை
- சிவில் சேவை
காவல்துறை
- அரசாங்க அதிகாரத்தை பிரயோகிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி காவல்துறையாகும்.
- இதன் பணிகளாவன,
- சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்தல்.
- சட்டத்தை மீறுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக தண்டனை பெற்றுக் கொடுத்தல்.
- மக்களின் நாளாந்த செயற்பாட்டை பராமரித்தல்.
- அரசாங்கத்திற்கும் அரச அமைப்பிற்கும் பாதுகாப்பை வழங்குதல்.
சிவில்சேவை
- அரசாங்கத்தின் கொள்கைகள், தீர்மானங்கள் மக்களிடம் கொண்டு செல்லும் கருவியே சிவில்சேவை எனப்படும் நிரந்தர நிர்வாகமாகும்.
- இலங்கையின் நிர்வாக சேவை மத்திய அரசாங்கம் மற்றும் மாகாணசபை ஆகிய இரண்டிற்காகவும் பணிபுரியும் சிவில்சேவை உத்தியோகத்தர்களைக் கொண்டுள்ளது.
அரசாங்க அதிகாரத்தை கட்டுப்பட்டுத்தும் வழிமுறைகள்
- தடைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாத அரசாங்க அதிகாரமானது நிச்சயமாக சர்வதிகாரம் தோன்றுவதற்குக் காரணமாக அமையும். இதனால் அரசாங்கம் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளாக,
- முறைசார் கட்டுப்பாடுகள்
- அரசியலமைப்பு
- வலுவேறாக்கம்
- தடைகள் சமன்பாடுகள்
- நீதிப்புனராய்வு
- எதிர்க்கட்சி
- ஊடகம்
- சிவில்சமூகம்
அரசியலமைப்பு:
அரசியமைப்பில் அரசாங்கம் ஒன்றின் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றின் அமைப்பு மற்றும் தொழிற்பாடு பற்றி தெளிவாக வரையறுக்கப்படுவதுடன் அவை ஒன்றையொன்று மீறிச் செல்லாத வகையில் அரசியல் அமைப்பு ரீதியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும்.
வலுவேறாக்கம்:
அரசாங்க அதிகாரம் கட்டுப்படுத்தப்படுவதுடன் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக நடப்பது தவிர்க்கப்படும்.
நீதிப்புனராய்வு அதிகாரம்:
சட்டத்துறையின் சட்டங்களும் நிறைவேற்றுத்துறையின் செயற்பாடுகளும் அரசியலமைப்பிற்கு இசைவானதா? எனப் புனராய்வு செய்து இசைவற்றதாயின் அவற்றின் செல்லுபடியாகும் தன்மையை இரத்து செய்வதற்கு நீதித்துறைக்குள்ள அதிகாரம்
எதிர்க்கட்சி:
எதிர்க்கட்சி ஆளும் கட்சியின் செயற்பாட்டில் விழிப்புடன் இருந்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பதவியிலிருந்து கட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பிரயோகித்தால் அதனை தடுப்பது எதிர்க்கட்சியின் நோக்கமாகும்.
ஊடகம்:
முறைகேடான அரசியல் பற்றி மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லல்.
ஆட்சி செயன்முறையில் திறந்த தன்மையைப் பேணச் செய்தல்.
முறைகேடான அரசாங்கத்திற்கு எதிரான பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குதல்.
சிவில் சமூகம்
அரசாங்க அதிகாரத்தை தன்னிச்சையாக மாறுவதைத் தடுத்தல் மற்றும் ஊழல் மிக்க அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் அதிகாரத்தை செய்வதற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கும் எதிராக கிளர்ந்தெழுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளல்.
அரசாங்கம் அமைப்புக்களும் பணிகளும்
சட்டத்துறை 





- ஒரு அரசாங்கத்தின் முக்கிய தொழிற்பாடு நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதாகும்.
- பொதுவாக சட்டமன்றங்கள் பாராளுமன்றம் என்ற பெயரினாலேயே அழைக்கப்படுகின்றன. ஆனால் சில நாடுகளில் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.
உதாரணம்: அமெரிக்கா – காங்கிரஸ்
- முன்னைய சோவியத் யூனியன் : சுப்ரீம் சோவியத்
இந்தியா: சட்டமன்றம்
- சட்டமன்றங்களின் பணிகள் அரசாங்கத்தின் அமைப்பைப் பொறுத்து வேறுபடும்.
உதாரணம்:
சர்வாதிகார அரசியல் சட்டமன்றம் – வெறும் ஆலோசனை சட்டமன்றம்
ஜனாதிபதி அரசாங்க முறை – வரையறுக்கப்பட்ட மன்றம்
பாராளுமன்ற அரசாங்க முறை – மிக அதிக பணிகள் கொண்ட சட்டமன்றம்
சட்டமன்றத்தின் பணிகள்
1. நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுதல்.
2. நிறைவேற்றுத்துறையை கட்டுப்படுத்தல் :
• பழிமாற்றிறைதல் மற்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம்
• நிறைவேற்றுத்துறை சமர்ப்பிக்கும் மசோதாக்களுக்கு அங்கீகாரம் வழங்காமை
• நிறைவேற்றுத்துறையிடம் கேள்வி கேட்டல் மற்றும் அதனை விமர்சித்தல்
3. நிறைவேற்றுத்துறையை தேவையான பெரும்பான்மை பலத்தை வழங்குதல். அதாவது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு தேவையான பெரும்பான்மையை வழங்குதல்.
4. பொது நிதியை கட்டுப்படுத்தல்
• அரச கருமங்களை மேற்கொள்வதற்கு தேவைப்படும் பணத்தின் அளவு, அதனை பெற்றுக்கொள்ளும் முறை என்பவற்றை அனுமதித்தல்.
5. நீதித்துறை பணிகள்
• குற்றப்பிரேரணையை விசாரித்து முடிவு கூறுதல்.
• பாராளுமன்ற சிறப்புரிமை மீறல்களை விசாரித்தல்
6. நியமனப் பணிகள்
உதாரணம்: இந்தியாவில் ஜனாதிபதியை தெரிவு செய்தல்.
அமெரிக்காவில் ஜனாதிபதியோடு சில நியமனங்களை மேற்கொள்ளல்.
சுவிஸ்லாந்தில் சமஷ்டிக் கவுன்சிலின் உறுப்பினர்களையும் சமஷ்டி நீதிமன்றின் நீதிபதிகளையும் நியமித்தல்.
7. அரசியல் யாப்பை திருத்துதல்.
அரசியல் யாப்பினை உருவாக்கும் திருத்தும் பணிகளை சட்டமன்றம் மேற்கொள்கின்றது.
8. எதிர்கால தலைவர்களையும் உருவாக்குதல்.
9. பொதுசன அபிப்பிராயத்தை வெளிப்படுதல்.
சட்டத்துறையின் நவீன போக்குகள்
1. அரசியல் கட்சி முறையின் வளர்ச்சி
2. சட்டத்துறை ஒரு பாரிய நிறுவனமாக இருப்பதனால் அவசரமாக தீர்மானங்களை எடுக்க முயன்றமை.
3. நிறைவேற்றுத்துறை தொடர்ச்சியாக பலமடைந்து வருதல்.
4. நீதிப்புனராய்வு அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்துறையின் சட்டங்களை இரத்துச் செய்யும் அதிகாரத்தை நீதித்துறை பெற்றுள்ளமை.
5. சட்டத்துறையின் உறுப்பினர்களால் நிபுணர்களின் உதவியை உடனடியாகவும் எளிதாகவும் பெற்றுக் கொள்ள முடியாமை.
சட்டமன்றத்தின் அமைப்பு:
- சட்டமன்றங்கள் ஓரவை சட்டமன்றங்களாகவும், ஈரவை சட்டமன்றங்களாகவும் காணப்படலாம்.
ஓரவைச் சட்டமன்றம்
- நாட்டின் சட்டமியற்றும் அதிகாரம் ஒரேயொரு சபையிடம் வழங்கப்படுமாக இருந்தால் அது ஓரவை சட்டமன்றம் எனப்படும்.
- சட்டத்துறையானது பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரபல்யமான மன்றம் ஒன்றினை மட்டும் கொண்டிருப்பின் அது ஒரு மன்ற முறை எனப்படும்.
உதாரணம் : இலங்கை, நியூசிலாந்து, இஸ்ரேல்
ஒருமன்ற முறைக்கு ஆதரவான கருத்துக்கள்:
- மக்களின் சட்ட இறைமை பிரிக்கப்படாதிருக்கும்.
- மக்களின் விருப்பு இரண்டாகப் பிளவுபடுவதைத் தடுக்க முடிவதுடன் செயற்திறனை அதிகரிக்க முடிகின்றது.
- சட்டமியற்றுதல் என்ற ஒரு வேலையை இரண்டு முறை செய்யவேண்டியதில்லை. இதனால் காலதாமதம் தவிர்க்கப்படுகின்றது.
- செலவு மிகக் குறைவு.
- புதிய அரசுகளுக்கும் சிறிய அரசுகளுக்கும் இம்முறை சிறந்ததாகக் காணப்படுகின்றது.
ஒருமன்ற முறைக்கு எதிரான கருத்துக்கள்:
- அதிகாரங்கள் ஒரு சபையிடம் மட்டும் குவிந்திருப்பதால் சர்வதிகார தன்மை கொண்டதாக காணப்படும்.
- அவரசமாகவும் தீர ஆலோசனை இன்றியும் மக்கள் நலன் பாதிக்கக்கூடிய சட்டங்கள் இயற்ற வழிவகுக்கும்.
- தேர்தலில் விரும்பாத அறிஞர்கள், நிபுணர்களின் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
- சிறுபான்மை மக்களின் பொதுசன அபிப்பிராயம் வெளிப்படுவது குறைவாக இருக்கும்.
- சட்டமன்றத்தின் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சி தான்தோன்றித்தனமாகச் செயற்பட முற்படலாம்.
- பல்லின மக்கள் வாழும் நாடுகளுக்கும் பெரிய அரசுகளுக்கும் ஓரவை சட்டமன்றம் பொருத்தமில்லை.
ஈரவைச் சட்டமன்றம்
- நாட்டின் சட்டமியற்றும் அதிகாரம் இருசபைகளிடம் வழங்கப்பட்டிருந்தால் அது ஈரவைச் சட்டமன்றம் எனப்படும்.
உதாரணம் : அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து
இருமன்ற முறைக்கு ஆதரவான கருத்துக்கள்:
- கீழ்ச்சபை தனது எல்லையைத் தாண்டி அவசரமாகவும் தீர ஆலோசனை இன்றியும் சட்டவாக்கம் செய்வது தடுக்கப்படுகின்றது.
- ஒருமன்ற முறையால் தோன்றும் சர்வதிகாரநிலையை தடைசெய்ய முடிதல்.
- பொதுத்தேர்தலில் போதிய பிரதிநிதித்துவம் பெற முடியாதவர்களுக்கு பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுத்தல்.
- முதலாம் மன்றத்தின் வேலைப்பளுவினை இரண்டாம் மன்றம் குறைக்க கூடியதாக இருக்கின்றது.
- சிறுபான்மை மக்களின் நலன் பாதுகாக்கப்படுவதோடு அவர்களின் பிரதிநிதித்துவமும் பாதுகாக்கப்படுகின்றது.
- பெரிய நாடுகளுக்கும் பல்லின மக்கள் வாழும் நாடுகளுக்கும் பொருத்தமானது.
இருமன்ற முறைக்கு எதிரான கருத்துக்கள்
- சட்டத்துறை இருமன்றங்களைக் கொண்டிருக்கும் போது பொதுமக்கள் விருப்பு இரண்டாகப் பிளவுறும்.
- இருமன்ற முறையினால் சட்டவாக்கத்தின் போது தேவையற்ற காலதாமதம் ஏற்படுகின்றது.
- ஒரே வேலையை செய்வதற்கு தேவையற்ற வகையில் இரண்டு மன்றங்கள் இருப்பதினால் அரசின் செலவு அதிகமாகின்றது.
- பொதுவாக இரண்டாம் மன்றம் பிற்போக்கு சக்திகளின் உறைவிடமாக இருப்பதனால் சமூக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது.
நிர்வாகத்துறை



- நிறைவேற்றுத்துறை என்பது சட்டவாக்கத்துறை இயற்றிய சட்டங்களுக்கேற்ப நாட்டின் நிர்வாகத்தை நடாத்துகின்ற நிறுவனமாகும்.
- நிர்வாகத்துறையின் பணிகள்:
1. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டல்.
2. பகிரங்க சேவையை கட்டுப்படுத்தல்:
• அமைச்சுக்களையும் இலாகாக்களையும் பரிபாலித்தல்,வழிநடத்துதல், மேற்பார்வை செய்தல்.
• உயர் பகிரங்க அலுவலர்களை நியமித்தல், பதவி உயர்வு வழங்குதல், இடமாற்றம் செய்தல், நீக்குதல்.
3. சட்டத்துறை பணிகள்:
• சட்டமன்றங்களை கூட்டல், கலைத்தல், ஒத்திவைத்தல்
• அவசர காலங்களில் உரை நிகழ்த்துதல்
• செய்திகளையும் தூதுவர்களையும் அனுப்புதல், மசோதாக்களை முன்வைத்தல்.
• மசோதாக்களுக்கு இறுதி அங்கீகாரம் வழங்குதல்.
4. நீதித்துறை பணிகள்:
• மேல்நிலை நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தல்.
• யாப்பு ரீதியான முறையில் அகற்றுதல்.
• குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குதல்.
• அரசாங்க வழக்கறிஞர்களை நியமித்தல்.
5. அவசர பாதுகாப்பு பணிகள் :
• முப்படைகளுக்கும் மற்றும் பொலிஸ், உயர் பதவிளுக்கும் ஆட்களை நியமித்தல் மற்றும் நீக்குதல்
• அவசரகால சட்டத்தையும் ஊரடங்கு சட்டத்தையும் பிரகடனப்படுத்துதல்.
• போரையும் சமாதானத்தையும் பிரகடனப்படுத்தல்.
6. நிதிசார்ந்த பணிகள்:
• வரவு – செலவு திட்டத்தை தயாரித்தல்.
• சட்டமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்தல்.
7. வெளிநாட்டு விவகாரம்:
• வெளிநாடுகளில் தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தல்.
• வெளிநாட்டுக்கொள்கைகளை வகுத்தலும் நடைமுறைப்படுத்தலும்.
• இராஜதந்திர அதிகாரிகளை நியமித்தல், ஏற்றுக்கொள்ளுதல்.
• வெளிநாடுகளோடு ஒப்பந்தங்களில் ஈடுபடுதல்.
8. சடங்கு முறையான பணிகள்:
• அரச விழாக்களுக்கு தலைமை தாங்குதல்.
• கௌரவ பட்டங்களை வழங்குதல்.
• அரச இலட்சிணையைப் பேணிப் பாதுகாத்தல்.
9. கட்டளை பிறப்பித்தல் :
• பொதுக்கொள்கைகள், தீர்மானங்கள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஆணைகளையும் கட்டளைகளையும் பிறப்பித்தல்.
10. ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை நடைமுறைப்படுதல்.
• சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சட்டத்துறை நிறைவேற்றுத்துறைக்கு ஒப்படைக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தல்.
நிர்வாகத்துறையின் நவீன போக்கு
- அரசின் செலவுகள் அதிகரித்தல்.
- அரசின் பொதுநலக் கொள்கையின் வளர்ச்சி
- அரசியல் கட்சி முறையின் வளர்ச்சி
- ஒரு செயற்றிறன் மிக்க தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நிர்வாகத்துறைக்கு உள்ளதிறன்
- நிர்வாகத்துறையால் நிபுணத்துவ ஆலோசனைகளையும் உதவிகளையும் அவசரமாகப் பெற்றுக்கொள்ள முடிதல்
நீதித்துறை 





- சட்டத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான விவரணத்திற்கும் சட்டத்தின் பிரயோகத்திற்கும் பொறுப்பான அரசாங்கத்துறையே நீதித்துறையாகும்.
- தற்கால அரசுகளின் முக்கியத்துவம் வாய்ந்ததுறையாக திகழ்கின்றது. பேராசிரியர் பிரைஸின் வார்த்தைகளில் கூறின் “நீதித்துறையின் மேன்மையே ஓர் அரசாங்கத்தின் உயர்வைக் காட்டும் அளவுகோலாகும்”.
நீதித்துறையின் பணிகள்:
- நீதியை நிர்வகித்தல்
- சட்டங்களுக்கு விளக்கமளித்தல்.
- ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக நடைமுறையிலுள்ள சட்டம் தெளிவற்றதாகவும் மௌனமாகவும் இருந்தால் அச்சட்டத்திற்கு விளக்கமளிப்பதோடு புதிய சட்டங்களையும் நீதித்துறை உருவாக்குகின்றது.
- பிரஜைகளின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாத்தல்.
- அரசியல் யாப்பை பாதுகாத்தல்:
- நீதித்துறை அரசியல் யாப்பிற்கு விளக்கப்படுகின்றது. சட்டத்துறையும் நிறைவேற்றுத்துறையும் பிறப்பிக்கும் சட்டங்கள் அரசியல் யாப்போடு ஒத்துப்போக்கின்றனவா? என்பதை பரிசீலனை செய்கின்றது.
- ஆலோசணை வழங்கும் பணி
சட்டங்கள் தொடர்பான நெருக்கடி நிலைகள் உருவானால் அதனைத் தீர்த்து வைப்பதில் சட்டத்துறைக்கும் நிறைவேற்றுத்துறைக்கும் நீதித்துறை ஆலோசணை வழங்கி உதவுகின்றது.
- கூட்டாட்சியைப் பாதுகாத்தல்.
கூட்டாட்சியில் நீதித்துறையானது மாநிலத்திற்கும் மற்றும் மாநிலங்களுக்கிடையிலும் ஏற்படுகின்ற பிணக்குகளைத் தீர்த்து வைத்து,கூட்டாட்சியின் இருப்பை பாதுகாக்கின்றது.
- நாட்டினுடைய பொது கொள்கைகளை பாதுகாத்தல்.
- அரசாங்க அலுவலர் மீது அல்லது நாட்டில் ஏற்படும் மிகப்பெரிய அழிவுகள், கலவரங்கள், சமுதாய பிரச்சனைகள் ஆகியவற்றை விசாரிக்கும் விசாரணைக் குழுவாகச் செயற்படல்.


























- ஒரு நாட்டின் உற்பத்தி மொத்த வேலை மட்டத்துக்கு சமமாகின்ற நிலைமை பேரினப் பொருளாதார சமநிலை.
- இதனை இரண்டு அணுகுமுறையில் முன்வைக்கலாம்.
- வருமான / செலவு அணுகுமுறை
- வெளிப்பாய்ச்சல் / உட்பாய்ச்சல் அணுகுமுறை
வருமான/ செலவு அணுகுமுறையின் கீழ் எளிய பொருளாதாரம் ஒன்றின் சமநிலை
![screenshot-31]()
எளிய பொருளாதாரம் ஒன்றில் மொத்தச் செலவு
E – மொத்த செலவு
- C – தனியார் நுகர்வுச் செலவு
- I – முதலீட்டுச் செலவு
எளிய பொருளாதாரம் ஒன்றில் மொத்த வருமானம்
![screenshot-33]()
எளிய பொருளாதாரம் ஒன்றில் வெளிப்பாய்ச்சல் மற்றும் உட்பாய்ச்சல் அணுகுமுறை
![screenshot-34]()
- எளிய பொருளாதாரம் ஒன்றில் வெளிப்பாய்ச்சலாக (S) சேமிப்பு கருதப்படும் அதேவேளை உட்பாய்ச்சலாக முதலீடு (I) கருதப்படுகிறது.
- மேலுள்ள சமன்பாட்டில் வெளிப்பாய்ச்சல் உட்பாய்ச்சலுக்கு சமனாகும்.
- எளிய பொருளாதாரம் ஒன்றில் நுகர்வுச் சார்பினைப் பின்வருமாறு காட்டலாம்:
![screenshot-35]()
- C – நுகர்வு
- a – தன்னியல்பான நுகர்வு
- b – எல்லை நுகர்வு நாட்டம்
- y – வருமானம்
வருமானத்தின் செல்வாக்குக்கு உட்படாது செய்யப்படும் நுகர்வு தன்னியல்பான நுகர்வு.
வருமானம் ஓரலகால் மாறும்போது நுகர்வு மாற்றமடையும் அளவு எல்லை நுகர்வு நாட்டத்தினால் (MPC) காட்டப்படும்.
![screenshot-36]()
நுகர்வுச் சார்பினை பின்வருமாறு வரிப்படம் மூலம் காட்டலாம்:
![screenshot-38]()
எளிய பொருளாதாரம் ஒன்றில் சேமிப்புச் சார்பு கீழ்த் தரப்படும் வகையில் காட்டப்படலாம்:
![screenshot-39]()
எளிய பொருளாதாரம் ஒன்றில் சேமிப்புச் சார்பு கீழ்த் தரப்படும் வகையில் காட்டப்படலாம்.
![screenshot-40]()
சேமிப்புச் சார்பினைப் பின்வருமாறு வரிப்படம் ஒன்றினால் காட்டமுடியும்:
![screenshot-41]()
எளிய பொருளாதாரம் ஒன்றில் வருமானம் மாற்றமடைந்த போதிலும் முதலீடு நிலையானது என எடுகோள் கொள்ளப்படும்.
அதன்படி முதலீட்டைக் காட்டும் வளையி பின்வருமாறு:
![screenshot-42]()
எளிய பொருளாதாரம் ஒன்றின் சமநிலை கீழ்த் தரப்பட்டுள்ள முறைக்கேற்ப கணிப்பிடலாம்:
- புள்ளிவிபர அட்டவணை மூலம்
- வரிப்படம் மூலம்
- சமன்பாடு மூலம்
புள்ளிவிபர அட்டவணையொன்றின் மூலம் எளிய பொருளாதாரம் ஒன்றின் சமநிலை கீழ்த் தரப்படும் வகையில் கணிப்பிட முடியும்.
![screenshot-43]()
வரிப்பட ரீதியாக எளிய பொருளாதாரம் ஒன்றின் சமநிலையை பின்வருமாறு கணிப்பிடலாம்:
![screenshot-44]()
- வரிப்படத்தின்படி சமநிலைத் தேசிய வருமானம் என்ற புள்ளியால் காட்டப்படும்.
- எளிய பொருளாதாரத்தின் சமநிலையை சமன்பாடுகள் மூலமும் கணிப்பிடலாம்.


















- ஜனநாயகம் என்ற பதத்தின் பொருள் மக்கள் அதிகாரம் ஆகும்.
- ஜனநாயகத்தை ஆங்கிலத்தில் DEMOCRACY என்ற சொல்லால் அழைப்பர். இதில் DEMO என்பது மக்களையும் CRACY என்பது ஆட்சியையும் அல்லது அதிகாரத்தையும் குறிக்கும்.
- ஜனநாயகத்தில் சமத்துவம், மக்கள் இறைமை, சுயாட்சி என்ற மூன்றும் பிரதானமானதாகும்.
ஜனநாயகம் பற்றிய வரைவிலக்கணங்கள்:
- ஆபிரகாம் லிங்கன் – மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் ஆட்சி
- கார்ணர் – ஜனநாயகம் என்பது ஓர் அரசாங்க முறையாகும். இது இறைமை அதிகாரத்தினை மக்கள் தங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்கின்ற உரிமையை வழங்குகின்ற ஒன்றாகும்.
- சீலர் – எல்லோருக்கும் உரிமை கிடைக்கப்பெற வழி செய்யும் ஒரு ஆட்சி முறையாகும்.
- றோபேட் – சாதாரண மனிதர்களும் அரசியல் தலைவர்களை கட்டுப்படுத்தக் கூடிய ஆட்சி
- தோமஸ்கூப்பர் – மக்களுடைய மக்களுக்கான அதிகாரம்
- வெஸ்டன் – மக்களுக்காக ஆக்கப்பட்ட மக்களுக்கு பதில் சொல்லும் ஆட்சி
- கலைக்களஞ்சியம் – மக்களுக்கு கிடைத்துள்ளதும் அவர்களால் நேரடியாக அல்லது சுதந்திரமான தேர்தல் மூலம் அவர்களது பிரதிநிதிகளால் நடைமுறைபடுத்தப்படும் மக்கள் ஆட்சி
ஜனநாயகத்தின் பண்புகள்:
- மக்கள் இறைமை
- சமத்துவம்
- உரிமைகளும் சுதந்திரமும்
- பிரதிநிதித்துவ அரசாங்கம்
- யாப்புறு அரசாங்கம்
- பொறுப்புடைய அரசாங்கம்
- சுதந்திரமான நீதித்துறை
- சட்டத்தின் ஆட்சி
- போட்டித் தன்மை வாய்ந்த அரசியல் கட்சி முறை
- சுதந்திரமான அமுக்க குழுக்களின் செயற்பாடு
- ஊடக சுதந்திரம்
- நல்லாட்சி
- சிறுபான்மையோர் உரிமை
- சிவில் சமூக செயற்பாடு
ஜனநாயகம் இரண்டு வகைப்படும்:
- நேரடி ஜனநாயகம்
- மறைமுக ஜனநாயகம்
ஜனநாயகம் வெற்றிகரமாக செயற்படுவதற்கு தேவையான நிபந்தனைகள்:
- அரசியல் அறிவு படைத்த மக்கள்
- அர்ப்பணிப்புடன் செயலாற்றும் தலைமைத்துவம்
- வளர்ச்சியடைந்த கட்சி முறைமை
- வளர்ச்சியடைந்த பொருளாதாரம்
- நீதியான தேர்தல்
- சகிப்புத் தன்மையும், ஒற்றுமை உணர்வும்
ஜனநாயக ஆட்சியின் நிறைகள்:
- ஒவ்வொரு பிரஜையும் அரசாங்கத்தில் பங்கெடுக்கின்றமையால் அரசாங்கம் சிறப்பாக செயற்படும்.
- மக்களின் உரிமை, சுதந்திரம் பேணப்படும்.
- சிறுபான்மையோர் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
- மக்களுக்கு அரசியல் சார் கல்வியினை அளிக்கின்றது.
- பொது மக்களை அரசியல்,பொருளாதார சமூக விடயங்களில் விழிப்புடன் இருக்க வழி செய்கின்றது.
ஜனநாயக ஆட்சியின் குறைபாடுகள்:
- இலஞ்சம், ஊழல் பெருகும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது.
- செலவுகள் மிகுந்த ஆட்சி முறையாக உள்ளது.
- தீர்மான எடுப்பு செயன்முறையில் பலரது கருத்துக்களுக்கும் இடமளித்தல் காலதாமதத்தை ஏற்படுத்துகின்றது.
- மக்கள் அரசியலில் பங்குபற்றும் வாய்ப்பு குறைகின்றது.







பொருளாதாரம் ஒன்றின் செயற்பாட்டை தீர்மானிக்கின்ற பிரதான மாறிகள் பேரினப் பொருளாதார மாறிகள்.
பேரினப் பொருளாதார மாறிகள்
- தேசிய உற்பத்தி
- வேலைவாய்ப்பு – வேலைமட்டம்
- விலைமட்டம்
- சென்மதி நிலுவை
- வெளிநாட்டு நாணயமாற்று விகிதம்
பிரதான பேரினப் பொருளாதார மாறிகளின் செயற்பாடு மாறும் போது பொருளாதாரத்தின் முழுமையான உற்பத்தியும் மாற்றமடையும்.