01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
1978ம் ஆண்டு அரசிய அமைப்பின் முக்கிய அம்சங்கள்
















































- மக்கள் இறைமை
- அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும் அடிப்படையில் கடமைகளும்
- அடிப்படை உரிமைகள்
- குடியரசு ஜனாதிபதி
- பாராளுமன்றம்
- அமைச்சரவை
- மக்கள் தீர்ப்பு
- மொழி மதம் பிரஜாவுரிமை
- மக்கள் இறைமை
- இலங்கை சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஒரு குடியரசு என்றும் இது ஜனநாயக சோசலிச குடியரசு என அழைக்கப்படும் என்றும் இக்குடியரசு ஓர் ஒற்றை ஆட்சி அரசாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- மேலும் இக்குடியரசின் இறைமை மக்களுக்கு உரியது என்றும் பாராதீனப்படுத்த முடியாததென்றும் இவ்விறைமை ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை என்பவற்றை உள்ளடக்கியதென்றும் கூறப்பட்டுள்ளது.
- மக்களின் சட்டவாக்க அதிகாரங்கள் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்ட பாராளுமன்றத்தினாலும் மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களினாலும் பிரயோகிக்கப்படும்.
- இலங்கையின் பாதுகாப்பு உட்பட மக்களின் நிர்வாக அதிகாரம் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியினூடாக மேற்கொள்ளப்படும்.
- மக்களின் நீதிஅதிகாரம் மற்றும் பாராளுமன்றம் சம்பந்தமான விடயங்களில் பாராளுமன்றத்தினால் நேரடியாகவும் ஏனைய விடயங்களில் அரசியல் அமைப்பினால் அல்லது பாராளுமன்ற சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அல்லது அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்கள் நியாயசபைகள், நீதி நிறுவனங்கள் ஆகியன மூலமும் பிரயோகிக்கப்படும்.
- ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மகாணசபைத் தேர்தல், உள்ளுராட்சித் தேர்தல், மக்கள் தீர்ப்பு தேர்தல் என்பவற்றில் வாக்களிக்கத் தகுதியுடைய 18 வயதை அடைந்த எவரும் வாக்காளர் இடாப்பில் பதிவுகளை கொண்டவருமான இலங்கையின் ஒவ்வொரு பிரஜையினாலும் வாக்குரிமை பிரயோகிக்ப்படும் என கூறப்பட்டுள்ளது.
- இலங்கை குடியரசின் ஆள்புலமானது 25 நிர்வாக மாவட்டங்களையும் அதன் ஆள்புல நீர்ப் பரப்புக்களையும் கொண்டிருக்கும் எனவும் பாராளுமன்றம் ஒரு தீர்மானத்தின் மூலம் இந்நிர்வாக மாவட்டங்களை உட்பிரிவாக பிரிக்கவோ அல்லது ஒன்றிணைக்கவோ முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- நன்மைகள்
- நிர்வாகத் துறைக்குப் பொறுப்பான ஜனாதிபதி மக்களினால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகின்றமையானது நிர்வாகத்துறையில் மக்களின் இறைமையை வலுப்படுத்துவதாக உள்ளது.
- நீதித்துறை சுதந்திரமாக செயற்படுவதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.
- நிர்வாக மாவட்டங்களை காலத்தின் தேவைக்கேற்ப பிரிக்கவும் ஒன்றிணைக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
- குறைபாடுகள்:
- ஜனாதிபதியின் கொள்கைகளோடு ஒத்துழைக்காத ஒரு குழுவினர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் போது ஜனாதிபதியினால் நிர்வாக அதிகாரத்தை செயற்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
- இலங்கையின் தேசியக் கொடியான சிங்கக்கொடி சிங்கள மக்களுக்கும் பௌத்த மதத்திற்கும் கொடுத்த முக்கியத்துவத்தினை ஏனைய இனங்களுக்கும் மதங்களுக்கும் கொடுக்கவில்லை.
- இலங்கை ஓர் ஒற்றையாட்சி அரசு என இதில் கூறப்படுகின்றது. இந்நிலைமை பல இனங்களும் சமத்துவமாக வாழ்கின்ற ஒரு சமஷ்டி ஆட்சி முறைக்கு தடையாக உள்ளது.
- இறைமை பற்றிய ஏற்பாடுகளில் திருத்தம் கொண்டு வருவதாயின் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களின் சம்மதமும் அவசியமென கூறப்பட்டமை.
- அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும் அடிப்படைக் கடமைகளும்

- அரசியலமைப்பின் ஆறாம் அத்தியாயம் அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகள் பற்றியும் அடிப்படைக் கடமைகள் பற்றியும் குறிப்பிடுகினறது.
- வழிகாட்டிக் கோட்பாடுகள் நீதியானதும் சுதந்திரமானதுமான சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் சட்டங்களை ஆக்கும்போதும்நிர்வாகத்தை நடத்தும்போதும் பாராளுமன்றம் அமைச்சரவை என்பவற்றிற்க்கு வழிகாட்டியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
- இலங்கையின் ஜனநாயக சோசலிச சமூகம் ஒன்றை உருவாக்கஅரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அதன் அடிப்படையில் பின்வருவன அரசின் குறிக்கோள்களாக இருக்கும் எனவும் குறிக்கப்பட்டுள்ளது.
- எல்லா மக்களும் தமது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் முழுமையாக அனுபவித்தல்.
- தேசிய வாழ்வின் அமர்வுகளிளெல்லாம் சமூக பொருளாதார அரசியல் ரீதியாக வழிப்படுத்தப்படுவனவாக அமைந்த ஒரு ஒழுங்கு முறையை செம்மையான முறையில் ஆக்கிப் பாதுகாப்பதன் மூலம் மக்களின் நலன்களை மேம்படுத்தல்.
- பகிரங்க பொருளாதார முயற்சியின் மூலமும் தனியார் பொருளாதார முயற்சியின் மூலமும் அதனை ஒழுங்கு படுத்துகின்ற சட்டங்கள் மூலமும் நாடு முழுவதையும் விரைவாக அபிவிருத்தி செய்தல்.
- சமூகத்தின் மூலவளங்களையும் சமூகத்தினால் விளைவிக்கப்பட்டவற்றையும் பொது நலனுக்கு பயன்படக் கூடிய வகையில் அனைத்து மக்களிடையேயும் முறையில் பகிர்ந்து அளித்தல்.
- மக்களின் ஒழுக்கத்தையும் கலாசார தரத்தையும் உயர்த்துவதோடு மனித ஆளுமையின் முழு வளர்ச்சியை உறுதிப்படுத்தல்.
- பின்வரும் கடமைகளையும் தத்துவங்களையும் அரசும் மக்களும் கொண்டிருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது:
- அரசானது இலங்கையின் சுதந்திரத்தையும் இறைமையையும் ஐக்கியத்தையும் ஆள்புல ஒருமையையும் பாதுகாத்தல் வேண்டும்.
- இன ,மொழி மற்றும் பல்வேறு மக்களிடையேயும் ஒத்துழைப்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் வளர்ப்பதன் மூலம் அரசானது தேசிய ஐக்கியத்தை பலப்பத்தல் வேண்டும்.
- அரசானது பிரஜை எவரையும் இனம், மொழி, சாதி, பால் காரணமாக அல்லது அரசியல் அபிப்பிராயம் காரணமாக அல்லது முயற்சி காரணமாக ஏதேனும் தகுதியீனத்திற்கு உட்படாத வண்ணம் பிரஜைகளுக்கு சமவாய்ப்புக்களை உறுதிப்படுத்தல் வேண்டும்.
- பொருளாதார கட்டமைப்பின் செய்றபாடானது செல்வமும் உற்பத்திச் சாதனங்களும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் ஒரு சிலரிடம் குவியாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்தல் வேண்டும்.
- அரசானது சமூக கலாசாரத்தையும் மொழிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு அரசு உதவுதல் வேண்டும்
- அரசானது குடும்பத்தை சமூகத்தின் அடிப்படை கூறாக ஏற்றுக் கொள்ளுதலும் பாதுகாத்தலும் வேண்டும்.
- சமுதாயத்தின் நன்மைக்கென அரசானது சூழலைப் பாதுகாத்தலும் பேணிக்காத்தலும் சீராக்குதலும் வேண்டும்.
- நாட்டின் பிரஜைகளுக்குரிய கடமைகள் என்றவகையில் இலங்கை மக்களுக்குபின்வரும் கடமைகளையும் வற்புறுத்துகின்றது.
- அரசியல் அமைப்பையும் சட்டத்தையும் போற்றிப் பாதுகாத்தல்
- தேசிய நலனை மேம்படுத்துதலும் தேசிய ஐக்கியத்தையும் வளர்த்தலும்
- தாம் தேர்ந்தெடுத்த முயற்சியை மனச்சாட்சியுடன் செயற்படுத்தல்.
- மற்றவர்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதித்தல்.
- இயற்கையைப் பாதுகாத்தலும் அதன் செல்வங்களைக் காத்தலும்.
- அவை சட்ட உரிமைகளையோ சட்டக் கட்டுப்பாடுகளையோ பற்றி எதுவும் கூறவில்லை. இதனால் இவை சட்டப்பெறுமதி அற்றவையாகவே உள்ளன.
- நன்மைகள்:
- பிரஜைகளின் கடமைகளுக்கும் இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது
- தனியார்துறை பொருளாதாரத்திற்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமையினால் உள்ளுர் வெளியூர் தனியார்களின் முதலீடுகள் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புக்கள் உருவாகிறது.
- இலங்கைப் பிரஜைகளின் இனம், மொழி, மதம், சாதி, பால், அரசியல் அபிப்பிரயாயம் என்பவற்றைக் கவனிக்காது சம வாய்ப்புக்களை வழங்கல் வேண்டும்.
- அரசானது குடும்பத்தை சமூகத்தின் அடிப்படைக் கூறாக ஏற்றுக் கொள்ளுதலும் பாதுகாத்தலும் வேண்டும.
- இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமையானது இயற்கை வளங்கள் அழிவதை தடுக்க உதவுகிறது.
- குறைபாடுகள்:
- கொள்கைகளுக்கு சட்ட அந்தஸ்தில்லை. இதனால் அரசு இவற்றை அமுல்படுத்தாதபோது மக்கள் நீதிமன்றத்தின் முன் இவற்றை பற்றி முறையிட முடியாது.
- அரசானது இன, மத,மொழி,சாதி,பால் ரீதியான பாகுபாடு காட்டக்கூடாது என கூறியுள்ளது. ஆனால் இவை நடைமுறையில் செயற்படவில்லை.
- தனியார் தறையின் வளர்ச்சி தொழிலாளர்கள் இதுவரைஅனுபவித்து வந்த சலுகைகள் உரிமைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். உதாரணம்: சுதந்திர வர்த்தக வலயம்
அடிப்படை உரிமைகள்




- அரசியல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பற்றிய ஏற்பாடுகள்
இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை கைக்கொள்ளும் சுதந்திரம் உட்பட சிந்தனை செய்யும் சுதந்திரம் மத சுதந்திரம் என்பன உண்டு.
- ஆள் எவரும் மனசாட்சியை அல்லது கொடூரமான மனிதாபிமான மற்ற நடத்தைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது.
சமத்துவத்திற்கான உரிமை உண்டு.
- ஒவ்வொரு பிரஜையும் பின்வருவனவற்றிற்கு உரித்துடையவர் ஆவர்.
- வெளியிடுதல் உட்பட பேச்சு சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு
- அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் உண்டு
- ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் உண்டு
- தொழிற்சங்கம் ஒன்றை அமைக்கவும் அதில் சேரவும் அனைவருக்கும் உரிமையுண்டு
- தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையோ வழிபாட்டிலும் அனுசரிப்பிலும் போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான உரிமையுண்டு.
- இலங்கை முழுவதற்கும் தடையின்றி நடமாடுவதற்கும் தான் விரும்பும் இடத்தில் வசிப்பதற்கும் சுதந்திரம் உண்டு
- இலங்கையில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் திரும்ப இலங்கைக்கு வந்து வாழ்வதற்கான சுதந்திரமுண்டு.
- அடிப்படை உரிமைகளின் நன்மைகள் :
- அரசியல் யாப்பு அமுலுக்கு வந்த காலப்பகுதியில் நாடாற்றவர்களாக இருந்த இந்திய வம்சாவளி மக்களும் அடிப்படை உரிமைகளின் பயன்பாட்டினைப் பெற்றுக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.
- அடிப்படை உரிமை மீறல்களுக்கு கு உள்ளானவர்கள் உயர்நீதி மன்றத்திற்கு விண்ணப்பித்து பரிகாரத்தினைப் பெற்றுக் கொள்ளும் வழிவகைகள் இற்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
முக்கியமான அடிப்படை உரிமைகள் எழுத்தில் இருக்கின்றமையானது மக்கள் அதனை சுதந்திரமாக அனுபவிப்பதற்கான வாய்ப்புக்களை கொடுத்துள்ளது.
- அடிப்படை உரிமைகள் சம்பந்தமான ஏற்பாடுகளை ஒம்பூட்ஸ்மென் நீதித்துறையின் சுதந்திரம் அவசரகால அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் என்பன மேலும் விரிவாக்கி உள்ளன.
- அடிப்படை உரிமைகளின் குறைபாடுகள்:
- அடிப்படை உரிமைகளுக்கு கூறப்பட்டுள்ள மட்டுப்பாடுகள் அரசாங்கம் அடிப்படை உரிமைகளையே துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கின்றது.
- அவசரக்கால சட்டத்திற்கு புறம்பாக பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளமையினாலும் அவசரக்கால சட்டம் இல்லாத வேளையிலும் அடிப்படை உரிமைகளின் பயன்பாடுகள் மக்களினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
- இவ்வடிப்படை உரிமைகள் ஏற்பாட்டில் உயிர்வாழும் உரிமை பற்றி கூறப்படவில்லை.
- குடியரசின் ஜனாதிபதி
































- 1972ம் ஆண்டில் காணப்பட்ட பெயரளவு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி நீக்கப்பட்டு இவ்வரசியல் திட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.
- ஜனாதிபதியே இலங்கை அரசின் தலைவராகவும் ஆயுதம் தாங்கிய முப்படைகளின் தலைவராகவும் தலைமைத் தளபதியாகவும் விளங்குவார்.
- இவர் 6 வருடத்திற்கு பதவி வகிக்கவென பொதுத்தேர்தல் ஒன்றின் மூலம் மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்றார்.
- ஒருவர் இரு தடவை மட்டுமே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படக் கூடியவராக இருக்கின்றார்.
- ஜனாதிபதி தேர்தல் அவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு குறையாத அல்லது 3 மாதத்திற்கு மேற்படாத காலப்பகுதியினுள் நடாத்தப்படுதல் வேண்டும்.
- ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் போட்டி இடுபவர்கள் பின்வரும் தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என அரசியல் அமைப்பில் கூறபட்டுள்ளது.
- இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்
- முப்பது வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
- தேர்தல் இடாப்பில் தனது பெயரைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும். அல்லது முன்னர் எப்போதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருந்திருத்தல் வேண்டும்.
- ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் பிரதம நீதியரசரின் முன்னிலையில் பதவிப் பிரமாணத்தை எடுத்தல் வேண்டும்.
- இவ்வாறு பதவிப் பிரமாணத்தை எடுக்கும் போது முன்னைய பதவிகள் ஏதாவது வகித்திருப்பின் அவற்றை துறத்தல் வேண்டும.
- ஜனாதிபதியாக வரக்கூடியவர் இறந்தால் தேர்தல் ஆணையாளர் முடிவினை வெளிப்படுத்தாது புதிய வாக்கெடுப்பினை நடாத்துதல் வேண்டும்.
- ஜனாதிபதி இறப்பதன் மூலம் அல்லது ராஜினாமா செய்வதன் மூலம் அல்லது பதவி நீக்கப்படுவதன் மூலம் ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்படுமாயின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை பிரதமர் ஜனாதிபதியாக பதவி வகித்தல் வேண்டும்.
- அவர் பதவி வகிக்க முடியாதவிடத்து சபாநாயகர் ஜனாதிபதியாக பதவி வகித்ததல் வேண்டும்.
- ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் நிகழ்வு ஜனாதிபதியின் பதவிக் காலத்திற்கு இடைக்காலத்தில் நடைபெற்றிருக்குமாயின் உறுப்பினர் ஒருவரை பாராளுமன்றம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இவ்வாறு ஜனாதிபதியாக தேந்தெடுக்கப்படுவர் முன்னைய ஜனாதிபதி பெற்ற அனைத்து அதிகாரங்களையும் கொண்டவராக விளங்குவார்.
- இவ்வரசியல் திட்டத்தின் மூலம் ஜனாதிபதியை உளப்பலவீனம் உடற்பலவீனம் அரசியல் அமைப்பினை மீறிய குற்றம் தேசத்துரோகம் புரிந்த லஞ்ச குற்றம் அதிகார துஷ்பிரயோக குற்றம் ஒழுக்ககேட்டுக் குற்றம் என்பவை தொடர்பாக பதவியில் இருந்து நீக்கலாம்.
- பாராளுமன்றம்







- 1972ம் ஆண்டு அரசியல் திட்டத்தில் காணப்பட்ட தேசிய அரசுப் பேரவை எனும் பெயர் நீக்கப்பட்டு மீண்டும்இச்சபைக்கு பாராளுமன்றம் என பெயரிடப்பட்டது.
- இதில் 196 பேர் தேர்தல் மாவட்டங்களில் இருந்து 6 வருடங்களுக்கு ஒரு தடைவ நடைபெறும் பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கு இணங்க தெரிவு செய்யப்படுவார்கள்.
- மீதி பேர் நாடு தழுவிய ரீதியில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாரத்திற்கு இணங்க தேசிய பட்டியலில் இருந்து நியமிக்கப்படுவார்கள்.
- பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 6 வருடங்கள் ஆகும்.
- பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை 6 வருடத்திற்கு மேல் நீடிக்க வேண்டுமாயின் அதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்படுவதோடு மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களினாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
- பொதுத்தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்த நடைபெறும் முதலாவது பாராளுமன்றக் கூட்டத் தொடரில் சபாநாயகர் உபசபாநாயகர் குழுக்களின் தலைவர் என்போர் தெரிவு செய்யப்படுவார்கள்.
- ஜனாதிபதி காலத்திற்கு காலம் பாராளுமன்றத்தை கூடுமாறு அழைக்கலாம் கலைக்கலாம் ஒத்திவைக்கலாம். ஆனால் வருடத்திற்கு ஒரு தடவையாவது பாராளுமன்றம் கூட்டப்படல் வேண்டும்.
- பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் பாராளுமன்றத்திற்கு சமூகம் அளித்துள்ளோரில் பெரும்பான்மையினரின் ஆதரவுடனேயே நிறைவேற்றப்படுதல் வேண்டும்
- பாராளுமன்றத்தை பிரதான பணி சட்டங்களை இயற்றுதலாகும். இந்தவகையில் பாராளுமன்றம் கடந்த காலத்தையும் உள்ளடக்கூடிய சட்டங்களை இயற்றும் அதிகாரத்தினை கொண்டுள்ளது. மேலும் எந்தச் சட்டத்தையும் இயற்றும். அதிகாரம்’ பாராளுமன்றத்திற்கு உண்டு. இந்தவகையில் இதன் சட்டவாக்க செயற்பாட்டிற்கு நேரடியான தடை கிடையாது.
- பாராளுமன்றம் தனது சட்டவாக்கத் தத்துவத்தை துறத்தலோ அல்லது வேறு நிறுவனங்களிடம் கையளிக்கவோ கூடாது என்றும் அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் பின்னர் அரசியல் அமைப்புக்கு கொண்டு வரப்பட்ட 13வது திருத்தத்தின் படி உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு சில விடயங்களில் சட்டவாக்க அதிகாரம் வழங்கப்பட்டது.
- பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் சபாநாயகரின் சான்றுரையுடன் சட்டமாக அமுலுக்கு வரும்.
- அரசியல் திட்டத்தில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திளினூடாக இத்தடைகள் ஏற்படுகின்றன. பாராளுமன்றத்திற்கு பறம்பாக மக்கள் தீர்ப்பின் மூலம் சட்டங்களை இயற்றுதல் பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட சட்ட மூலங்களை மக்கள் தீர்ப்பின் மூலம் நிறைவேற்றுதல் என்கின்ற அதிகாரங்களினூடாக ஜனாதிபதி பாராளுமன்ற சட்ட ஆக்க அதிகாரத்தில் தலையிடுவதற்கு வாய்ப்பு உண்டு.
- இலங்கை சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயக சோசலிச குடியரசாகும் என்பதோடு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என அறியப்படுதல் வேண்டும்.
- இலங்கை குடியரசு ஒற்றையாட்சி உடைய ஒரு அரசாகும்.
- இலங்கை குடியரசின் இறைமை மக்களுக்குரியதாகவும் பாராதீனப்படுத்த முடியாததாகவுகவும் இருக்கும். இறைமை என்பது ஆட்சித் தத்துவங்கள் அடிப்படை உரிமைகள் வாக்குரிமை என்பவற்றை உள்ளடங்கும்.
- இலங்கை குடியரசின் தெசியக் கொடி சிங்கக் கொடியாக இருத்தல் வேண்டும்.
- இலங்கை குடியரசின் தேசிய கீதம் ஸ்ரீலங்கா தாயே ……… என்பதாக இருத்தல் வேண்டும்.
- ஆதன் சொற்களும் இசையமைப்பும் அரசியல் அமைப்பின் 3ம் அட்டவணையில் தரப்பட்டவவையாக இருத்தல் வேண்டும்
- இலங்கை குடியரசின் தேசிய தினம் பெப்ரவரி 4ம் திகதியாக இருத்தல் வேண்டும்.
- இலங்கை குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மை தானம் வழங்கப்படுதல் வேண்டும்.
- ஆரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்ல மதத்திற்கும் காப்புறுதி செய்யும் அதே வேளை பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளத்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.
- நிர்வாகத் துறைக்கு பொறுப்பான அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு கூட்டாக பொறுப்புடையது.
- ஆமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலம் அமைச்சரவையை பதவி நீக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உண்டு.
- அமைச்சரவையில் ஜனாதிபதி தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அவர்களது கருமம் தொடர்பாக கேள்வி கேட்கும் உரிமை பாராளுமன்றத்திற்கு உண்டு.
- நிதியினை செலவிடல் வரிகளை அறவிடல் வரவு – செலவு திட்டத்தை அங்கீகரித்தல் என்பவை தொடர்பிலும் பாராளுமன்றம் அதிகாரமுடையதாக விளங்குகின்றது.
- உயர்நீதிமன்றம் மேல் முறையீட்டு நீதிமன்றம் மேல் நீதிமன்றம் என்பவற்றின்
Pதிபதிகளை பதவி நீக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படல் வேண்டும்.
- நன்மைகள்:
- விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டமையினால் பாராளுமன்றத்தில் சிறிய கட்சிகளும் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.
- தேர்தல் தொகுதி ரீதியாக குறைவான எண்ணிக்கையில் உள்ள சிறுபான்மை இனங்கள் தங்களினுடைய பிரதிநிதிகளையும் பாராளுமனற்த்தில் அங்கம் பெற வைத்தது.
- தேசயப் பட்டியல் பிரதிநிதிஜத்துவத்தினால் கல்விமான்கள் பலரை பாராளுமன்றம் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஊதாரணம்: லக்ஸ்மன் கதிர்காமர்
- முக்கள் தீர்ப்பு ஏற்பாடுகள் மூலம் சட்டவாக்க அதிகாரத்தில் மக்களுக்கும் இடம் கொடுக்கப்படுகின்றமையானது நேரடி மக்களாட்சிக் கோட்பாட்டினை வலிமைப்படுத்துவதாக உள்ளது.
- அரசியல் யாப்பினை தீருத்துவது கடினமாக்கப்பட்டமை அரசியல் யாப்பு தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதற்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்கின்றது.
- குறைபாடுகள்
- பாராளுமன்றத்தினைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளமையானது பாராளுமன்றத்தின் இறைமையை பாதிப்பதாக உள்ளது.
- பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட சட்ட மூலத்தை மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளமையானத பாராளுமன்றத்தின் சட்டவாக்க இறைமையை பாதிப்பதாக உள்ளது.
- கடந்த காலத்தையும் உள்ளடக்கும் சட்டத்தை பாராளுமன்றம் இயற்றலாம் எனக் கூறப்பட்டுள்ளமையானது அரசியல் பழிவாங்கல்களுக்கு வழிவகுப்பதாக உள்ளது.
அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு பொதுவசாக 2ஃ3 பெரும்பான்மை தேவையென கூறப்பட்டது. ¾ பங்கு பெரும்பான்மை இனத்தைக் கொண்ட ஒரு நாட்டில் இவ்வேற்பாடு பெரும்பான்மை இனத்திற்கு சாதகமாகவும் சிறுபான்மை இனத்திற்கு பாதகமாகவும் காணப்படுகின்றது.
அமைச்சரவை





- ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் என்போரைக் கொண்ட குழுவே அமைச்சரவை என அழைக்கப்படுகின்றது.
- ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவராக விளங்ககின்றார்.
- அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து நியமிக்கப்படுகின்றார்கள். இவ்வாறு நியமிக்கப்படும் போது பாராளுமன்ற அங்கத்தினர்களில் கூடுதலான நம்பிக்கையை பெற்றவரே பிரதமராக நியமிக்கப்படுவார்.
- பின்னர் தேவையான போது பிரதமரின் ஆலோசனையைப் பெற்று ஏனைய அமைச்சர்களை ஜனாதிபதி நியமிப்பார்.
- அமைச்சரவை கூட்டாக பாராளுமன்றத்திற்கு பொறுப்புடையது அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை nடிகாண்டு வந்து நிஜறைவேற்றுவதன் மூலம் அமைச்சரவையை பதவியிலிருந்து நீக்கலாம்.
- இவ்வாறு அமைச்சரவை பதவி நீக்கப்பட்டாலும்ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருப்பார்.
- அமைச்சர்களுக்கு ஒதுக்காத அமைச்சுக்களை ஜனாதிபதி தானே பொறுப்பேற்பார். குறிப்பாக பாதுகாப்பு அமைச்சு இவரின் பொறுபப்பிலேயே இருக்கின்றது.
- பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் வரை பழைய அமைச்சரவையே காபந்து அமைச்சரவையாக தொடர்ந்தும் பதவியில் இருக்கும்.
- அமைச்சரவைக்கென ஒரு செயலாளர் இருப்பார்.
- இவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்.இவர் அமைச்சரவை அலுவலகத்திற்கு பொறுப்பாக இருப்பதுடன் ஜனாதிபதியால் அல்லது அமைச்சரவையினால் இவருக்கென ஒதுக்கப்பட்ட பணிகளையும் மேற்கொள்பவராக விளங்குவார்.
- இவரைவிட ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒவ்வொரு செயலாளர்கள் இருப்பார்கள். இவர்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் தத்தமது அமைச்சுக்குரிய அமைச்சர்களின் பணிப்புரைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் அமைய அவ்வமைச்சு சார்ந்த நிறுவனங்களின் மீது மேற்பார்வை செய்வார்கள்.
- சட்டத்துறை தொடர்பான அதிகாரங்கள்:
- பாராளுமன்றத்துக்குத் தேவையான மசோதாக்களை உருவாக்குதல்.
- உருவாக்கப்பட்ட மசோதாக்களை அமைச்சரவையின் உறுப்பினர்களுக்கூடாக பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தல்
- பாராளுமன்றத்தில் தமது கட்சி உறுப்பினர்களின் ஆதரவினை கொண்டு விவாதங்களை நடாத்தி அதனை நிறைவேற்றல்.
- பாராளுமன்றத்தில் அமைச்சுக்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தல்
பாராளுமன்றம் தொடர்பான அனைத்து விடயங்களிலும் அமைச்சரவை சார்பாக கூட்டாக செயற்படுதல்.
- நிர்வாகத்துறை தொடர்பான அதிகாரங்கள்:
- பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஏற்ப நிர்வாகத் துறையை கொண்டு நடாத்துதலே அமைச்சரவையின் பிரதான நிர்வாக பணியாகும்.
- இதற்கேற்ப ஒவ்வொரு அமைச்சுக்களினதும் அதன் கீழ் இயங்கும் திணைக்களங்களினதும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வது இதன் பணியாகும்.
- அரச அலுவலர்களது இடமாற்றம், நியமனம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பவற்றிற்கும் அமைச்சரவை பொறுப்பானதாகும்.
- அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய அரச அலுவர்களுக்கான ஆட்சேர்ப்புத் திட்டங்களை உருவாக்குதல் பதவியுயர்வு இடமாற்றம் என்பன மேற்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு நெறிகளை உருவாக்குதல்.
- நன்மைகள்:
பாராளுமன்றத்தினால் கட்டுப்படாதவராகவும் அதே வேளை நிறைவேற்று அதிகாரம் கொண்டவராகவும் உள்ள ஜனாதிபதி அமைச்சரவைக்கு தலைமை தாங்குவது துரித அபிவிருத்திக்கு உதவுகின்ற ஒன்றாக உள்ளது.
- நீதித்துறையானது அமைச்சரவையின் தலையீட்டில் இருந்து தவிர்க்கப்பட்டமை அது சுதந்திரமாக இயங்குவதற்கு வாய்ப்பினை உருவாக்கி உள்ளது.
- பாராளுமன்றத்தின் கட்சிகளுக்கிடையே மரண்பாடுகள் ஏற்பட்டு ஆளுங்கட்சி பலவீனமாக இருந்தாலும் ஜனாதிபதியால் அமைச்சரவையை உறுதியாக வைத்திருக்க முடிகின்றது.
- குறைபாடுகள்:
- அமைச்சரவை தொடர்பான முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றமையானது
- அதன் சர்வதிகாரத்துடன் தொழிற்படுவதற்கான வாய்ப்பினை உருவாக்கியது.
- சிறுபான்மை இனத்தவர்களில் ஒருவர் அமைச்சராக வருவதென்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.
- அமைச்சரவையின் பிரதமர் பெயரளவிற்கு அதிகாரம் எதுவும் இல்லாத ஒருவராக விளங்குகின்றார்.
- மக்கள் தீர்ப்பு
- மக்கள் தீர்ப்பு எனும் அம்சம் இவ்வரசியல் அமைப்பிலேயே முதல் முதலாக சேர்க்கப்பட்டது.
- 1978 அரசியல் அமைப்பின் ஜனாதிபதி பின்வரும் சந்தர்ப்பங்களில் மக்கள் தீர்ப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- அமைச்சரவை மக்கள் தீர்ப்புக்கு விடப்பட வேண்டும் என சான்றுரை அல்லது சிபாரிசுஅளித்துள்ள விடயங்கள்
- உயர்நீதிமன்றம் மக்கள் தீர்ப்புக்கு விடப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ள விடயம்
- பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ள ஏதேனுமொரு சட்டமூலம் நாட்டு நலனுக்கு அவசியமானது என ஜனாதிபதி கருதும் பட்சத்தில் அவ்விடயம்
- ஜனாதிபதியின் அபிப்பிராயத்தின்படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் கருதும் விடயங்கள்
- இவற்றைவிட அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பினும் அதில் மக்கள் தீர்ப்புக்கும் விடப்படல் வேண்டும் என கூறப்பட்டுள்ளவற்றை மக்கள் தீர்ப்புக்கு விடலாம்.
- அத்தோடு பாராளுமன்றத்தின் கால எல்லையை நீடிக்க வேண்டுமாயின் தீர்ப்புக்கு விடப்பட வேண்டும்.
- மக்கள் தீர்ப்புக்கென மக்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஏதேனும் விடயம் மக்கள் தீர்ப்பின் போது அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்படின் அது மக்களினால் அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும்.
- மக்கள் தீர்ப்பின் நன்மைகள்:
- இம்மக்கள் தீர்ப்பு முறை மக்களினுடைய ஜனநாயகத்தையும் மக்களாட்சிக் கோட்பாட்டையும் மேலும் வலுப்படுத்துவதாக காணப்படுகின்றது.
- மக்களின் அடிப்படை உரிமைகளையும் இம்மக்கள் தீர்ப்புமுறை வலுப்படுத்துவதாக விளங்குகின்றது.
- அரசியல் கட்சிகள் சம்மதிக்காத சந்தர்ப்பங்களில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை ஜனாதிபதி மக்கள் தீர்ப்புக்கு விடக்கூடிய நிலை இங்கு காணப்படுகின்றது.
- மக்கள் தீர்ப்பின் குறைபாடுகள்:
- இலங்கையில் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீத அளவில் மட்டுமே இருப்பதனால் சிறுபான்மையினருக்கு எகிரான சட்டங்கள் மக்கள் தீர்ப்பு என்ற பெயரில் நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
- பெருந்தொகையான இலங்கை வாக்காளர்கள் அரசியல் விடயங்கள் தொடர்பான அறிவு குறைந்தவர்கள் இதனல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருமத்துக்கும் அவர்கள் சரியான ஒரு தீர்ப்பை கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.
- இலங்கை வாக்காளர்கள் கட்சி அபிமானம் மிக்கவர்களானபடியால் மக்கள் தீர்ப்பின் போதும் கட்சியை கருத்திற் கொண்டு வாக்களிக்கும் போது இம்முறை எதிர்பார்க்கும் நோக்கங்களை நிறைவேற்றுவதாக இருக்க மாட்டாது.
- அடிக்கடி தேர்தல் நடக்குமாயின் அது இலங்கை போன்ற பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடுகளுக்கு மிகுந்த செலவுச் சுமையை தருவதாக அமையும்.
- அவசரமாக செய்து முடிக்கப்பட வேண்டிய விடயங்களுக்கு இம்முறை தடையாக இருக்கும். ஆகையால் குறிப்பிட்ட விடயத்தினால் எதிர்பார்க்கப்படும் பலன்களும் கிடைக்காமல் போகலாம்.
- மொழி மதம் பிரஜாவுரிமை
- மொழி
- இவ்வரசியல் திட்டத்தில் ஆரம்பத்தில் சிங்கள மொழி அரச கரும மொழியாகவும் சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழியாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.
- ஆனால் 1987ம் ஆண்டு ஜீலை 19ம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியல் அமைப்பிற்கு கொண்டு வரப்பட்ட 16வது திருத்தத்தின் படி சிங்களமும் – தமிழும் இலங்கையின் அரச கரும மொழியாகவும் ஆங்கிலம் இலங்கையின் இணைப்பு மொழியாகவும் இருக்கும் எனக் கூறப்பட்டது.
- கல்வி மொழியை பொறுத்தவரை இலங்கை மக்கள் ஏதாவது ஒரு தேசிய மொழியில் கல்வியினை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டது.
- நிர்வாக மொழியை பொறுத்தவரை சிங்களமும் தமிழும் இலங்கை முழுவதும் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும்.
- வடகிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் சிங்கள் மொழி நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும்.
- எனினும் பிரஜைகள் அங்குள்ள அரச நிறுவனங்களில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருத்தல் வேண்டும்.
- வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும்.
- ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பாக ஒரு மொழி பேசுவோர் ஒரு உதவி அரசாங்க அதிபர் குழு மட்டத்தில் செறிவாக இருக்கும் பொழுது அந்த மொழி பேசுவோரும் செறிவாக உள்ள இடங்களில் இரண்டு மொழிகளையும் பேசுவதற்கான நிர்வாகம் இருத்தல் வேண்டும்.
- சட்டவாக்க மொழியைப் பொறுத்தவரையில் சிங்களமும் தமிழும் இலங்கையின் சட்டவாக்க மொழியாக இருத்தல் வேண்டும்.
- அதேவேளை உருவாக்கப்படும் ஒவ்வொரு சட்டத்திற்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று இருத்தல் வேண்டும்.
- நீதிமன்ற மொழியைப் பொறுத்த வரை சிங்களமும் தமிழும் நீதிமன்ற மொழியாக இருத்தல் வேண்டும்.
- தமிழ்மொழி இல்லாத இடப்பரப்புகளில் சிங்கள மொழி இருத்தல் வேண்டும்.
- இங்கு நீதிமன்ற பதிவேடுகள் அனைத்தும் சிங்கள மொழியில் இருத்தல் வேண்டும்.
- எனினும் கட்சிக்காரர் அல்லது வழக்கறிஞர் தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் வழக்குகளை சமர்ப்பிக்கவும் அம்மொழியில் வாதாடவும் உரிமை உண்டு.
- மதம்
- இலங்கையில் அரச மதமாக பௌத்த மதம் காணப்பட்டது.
- பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாத்தலும் அரசின் கடமையாகும் எனவும் கூறப்பட்டது.
- அதேவேளை ஏனைய மதங்களின் சுதங்திரங்களும் அதன் வழிபாட்டு உரிமைகளும் ணேப்படும் எனவும் கூறப்பட்டது.
- பௌத்த மதம் பற்றிய இவ்வேற்பாட்டில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் இரண்டில் மூன்று பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதுடன் மக்கள் தீர்ப்பு ஒன்றுடன் மக்களின் அங்கீகாரமும் அதற்கு அவசியமென கூறப்பட்டது.
- பிரஜாவுரிமை
- இவ்வரசியல் திட்டம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் பிரஜாவுரிமை தொடர்பாக வம்சாவழி பிரஜை பதிவுப் பிரஜை என இரு பிரிவுகள் காணப்பட்டன.
- இவ்வரசியல் திட்டம் அவ்வேற்பாட்டை நீக்கி எல்லோருக்கும் இலங்கை பிரஜை என்ற பதத்தினை பயன்படுத்தியது.
- இதன் மூலம் பதிவுப் பிரஜை என்ற வகையில் ஒரு இரண்டாந்தர நிலையில் இருந்த வம்சாவழி மக்கள் இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தினை பெற்றுக் கொண்டனர்.
01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
பொருட்கள் மற்றும் சேவை உற்பத்தியின் போது உற்பத்திப் பெறுமதிக்கு சமனான வருமானமொன்று உருவாகும் அதேவேளை அவ்வருமானம் மறுபக்கத்தில் பொருட்கள் சேவைகளுக்கான கேள்வி என்ற வகையில் செலவிடப்படும்.
மொத்தச் செலவின் மாறிகள்
- தனியார் நுகர்வுச் செலவு
- அரச நுகர்வுச் செலவு
- முதலீட்டுச் செலவு
- தேறிய ஏற்றுமதி




- எளிய பொருளாதாரம் ஒன்றில் அரசாங்கம் உள்ளடக்கப்படும் போது அது மூடப்பட்ட பொருளாதாரமாக மாறும்.
- இதனால் மொத்தச் செலவு மற்றும் வருமான மாறிகளுடன் வரி (T) அரசாங்க செலவு (G) மாற்றங்கள் (TR) என்பன புதிதாக சேர்க்கப்படும்.
- இங்கு வரி (T) எனக் கருதப்படுவது தன்னியல்பான வரி மட்டும்.
மூடப்பட்ட பொருளாதாரம் ஒன்றின் சமநிலையைக் கணிக்கும் போது பயன்படுத்தப்படும் மாறிகள்
- நுகர்வு (C)
- சேமிப்பு (S)
- தன்னியல்பான வரி (T)
- அரச செலவு (G)
- மாற்றங்கள் (TR)
- முதலீடு (I)
மூடப்பட்ட பொருளாதாரம் சமநிலை கீழே தரப்படும் அணுகுமுறைகள் இரண்டின் கீழ் விளக்கப்பட முடியும்:
- வருமான – செலவு அணுகுமுறை
- உட்பாய்ச்சல் – வெளிப்பாய்ச்சல் அணுகுமுறை
வருமான – செலவு அணுகுமுறையின் கீழ் எளிய பொருளாதாரம் ஒன்றின் சமநிலை
- எளிய பொருளாதாரம் ஒன்றில் மொத்தச் செலவு தனியார் நுகர்வுச் செலவு (C), அரசாங்க செலவு (G), முதலீடு (I) என்பவற்றின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும்.
![screenshot-61]()
- மூடிய பொருளாதாரம் ஒன்றில் வருமானம் (Y), தனியார் நுகர்வுச்செலவு (C), தனியார் சேமிப்பு (S) மற்றும் வரி (T) என்பவற்றின் மொத்தத்துக்குச் சமனாகும்.
![screenshot-62]()
மூடப்பட்ட பொருளாதாரம் ஒன்றில் வெளிப்பாய்ச்சல் மற்றும் உட்பாய்ச்சல் அணுகுமுறையின் கீழ் சமநிலை
![screenshot-63]()
- இங்கு சேமிப்பு (S) மற்றும் வரி (T) என்பன வெளிப்பாய்ச்சலாகவும் முதலீடு (I) மற்றும் அரச நுகர்வு (G) என்பன உட்பாய்ச்சலாகவும் கருதப்படுகின்றன.
மூடப்பட்ட பொருளாதாரம் ஒன்றில் நுகர்வுச் சார்பு
![screenshot-64]()
மூடிய பொருளாதாரம் ஒன்றின் சமநிலையை கணிப்பிடும் முறைகள்
- புள்ளிவிபரம் மூலம்
- வரிப்படம் மூலம்
- சமன்பாடு மூலம்
பணமும் வங்கியும் 




























பொருட்கள் சேவைகள் பரிமாற்றத்தில் பயன்படும் எந்த ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடகமும் பணம் ஆகும்.
பணத்தின் பரிமாண வளர்ச்சிப் போக்கு






- பொருட் பணம்
- உலோகப் பணம்
- கட்டடப் பணம்
- வங்கிப் பணம்
- இலத்திரனியல் பணம்
பணத்தின் பண்புகள்
















- பொது ஏற்பனவு
- அருமைத் தன்மை
- இனங்காணக் கூடிய தன்மை
- கொண்டு செல்லக் கூடிய தன்மை
- பிரிபடும் தன்மை
பணத்தின் வகைகள்
- சட்டப்பணம்
- வங்கிப் பணம்
- அண்மியப் பணம்
- இலத்திரனியல் பணம்
இலங்கையில் நிதி நிறுவனங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்
- மத்திய வங்கி
- வங்கித்துறை
- உரிமம் பெற்ற வணிக வங்கி
- உரிமம் பெற்ற விசேட வங்கி
- வைப்புக்களை ஏற்கும் ஏனைய நிதி நிறுவனம்
- பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பணி
- கூட்டுறவு கிராமிய வங்கி
- சிக்கன கடன் வழங்கும் கூட்டுறவு சங்கம்
- ஏனைய விசேட நிதி நிறுவனங்கள்
- குத்தகைக் கம்பனிகள்
- வியாபார வங்கிகள்
- முதன்நிலை வணிகர்கள்
- பங்கு முகவர் கம்பனி
- அலகு பொறுப்பாட்சி
- முயற்சி மூலதனக் கம்பனி
- கடன் தரப்படுத்தல் நிறுவனம்
- ஒப்பந்த சேமிப்பு நிறுவனம்
- காப்புறுதி கம்பனிகள்
- ஊழியர் நம்பிக்கை நிதியம்
- ஊழியர் சேமலாப நிதியம்
வணிக வங்கியால் பேணப்படும் வைப்புக்கள்
- நடைமுறை வைப்பு
- சேமிப்பு வைப்பு
- நிலையான வைப்பு
நடைமுறைக் கணக்கினைப் பேணுவதால் வணிகருக்கு கிடைக்கும் வசதிகள்
- காசோலை மூலம் கொடுப்பனவுகள்
- நேரடி வைப்புக்களை மேற்கொள்ளலாம்.
- நிலையியற் கட்டளை கொடுப்பனவுகள்
- வங்கி மேலதிகப் பற்று வசதி
- கணக்கறிக்கைகளைப் பெறக்கூடிய வசதி
வணிக வங்கியில் வழங்கப்படும் கடன் வசதிகள்
- வங்கி மேலதிகப் பற்று
- கடன்
வணிக வங்கியால் வழங்கப்படும் ஏனைய வசதிகள்
- குத்தகைச் சேவை
- நாணய கடிதங்கள் வழங்குதல்
- பிரயாணிகள் காசோலை வழங்குதல்
- பாதுகாப்பு வசதிகள்
- முகவர் சேவை
- குத்தகைச் சேவை
- நாணய கடிதங்கள் வழங்குதல்
- பிரயாணிகள் காசோலை வழங்குதல்
- பாதுகாப்பு வசதிகள்
- முகவர் சேவை
- பணப்பரிமாற்று நடவடிக்கை
காசோலையுடன் தொடர்புடைய கட்சியினர்
- பிறப்பிப்பவர்
- வங்கி
- கட்டளையை ஏற்பவர் ( கொடுணி )
- பெறுபவர்
- சாட்டுதல் செய்பவர்
- சாட்டப்படுபவர்
காசோலையின் வகைகள்
- காவியின் காசோலை
- கட்டளைக் காசோலை
குறுக்குக் கோடிடல்
- காசோலையின் முகப்பில் சமாந்தரமாக இரு கோடுகளை வரைதல் அல்லது அதனுள் வணிக வங்கியின் பெயரை எழுதுதல் குறுக்குக் கோடிடல் ஆகும்.
- காசோலையின் பாதுகாப்பு கருதி குறுக்குத் கோடிடல் மேற்கொள்ளப்படுகிறது.
- குறுக்குக் கோடிடல் வகை
புறக் குறிப்பிடல்
- காசோலையில் முகப்பில் உள்ளவரே பெறுபவர் தனது பெயரை பின்புறத்தில் எழுதுதல் புறக் குறிப்பிடல் ஆகும்.
- புறக் குறிப்பிடல் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்கள்
- பெறுபவர் மூலம் காசோலையை வங்கிகள் வைப்பு செய்யும் போது
- கட்டளை காசோலையொன்றை வேறொரு நபருக்கு வழங்கும் போது
- குறுக்குக் கோடிடாத காசோலையை வங்கி கருமபீடத்தில் சமர்ப்பித்து காசாக்கும் போது
காசோலை மறுக்கப்படல்
- கொடுப்பனவிற்காக வங்கிக்குச் சமர்ப்பிக்கப்படும் காசோலை ஒன்றுக்கு பணம் செலுத்தப்படுதல் வங்கியினால் மறுக்கப்படல் காசோலை மறுக்கப்படல் ஆகும்.
- சட்டவாக்கத்தில் நேரடியாகப் பங்குபற்றுதலே நேரடி ஜனநாயகத்தின் கருவாகும்.
- அதாவது மக்களே தமக்குரிய சட்டங்களை இயற்றுவதுடன் அதற்கு சகல மக்களும் அங்கீகாரம் வழங்கும் முறையாகும்.
- கிரேக்க காலத்தில் நடைமுறையிலிருந்த நேரடி ஜனநாயக முறையானது காலப்போக்கில் ஏற்பட்ட சனத்தொகை அதிகரிப்பு, நிலப்பரப்பின் பெருக்கம் என்பவற்றால் சாத்தியமற்றதாகியது.
- இருப்பினும் ஆட்சி செயன்முறையில் மக்களின் பங்குபற்றுதலை அதிகரிப்பதற்காக சில நாடுகளில் நேரடி ஜனநாயக ஏற்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அவையாவன:
- ஆரம்ப மக்கள் மன்றம்
- ஒப்பங்கோடல் அல்லது குடியொப்பம் அல்லது மக்கள் தீர்ப்பு
- மக்கள் துவக்கம் அல்லது தொடக்கி வைத்தல்.
- மக்கள் ஆணை அல்லது பிளொபிசைட்
- மீளழைத்தல் அல்லது திருப்பியழைத்தல்.
தேவைகள் (NEEDS) 











மனிதன் உயிர்வாழ அவசியமான ஆகக் குறைந்த அடிப்படை வசதிகள் ஆகும்.
(உ – ம்) : உணவு, உடை
- இது உயிரியல் விஞ்ஞான ரீதியானது.
- இது வரையறுக்கப்பட்டது.
- எல்லோருக்கும் பொதுவானது ஆகும்.
விருப்பங்கள் (WANTS)
மனிதன் தேவை ஒன்றை நிறைவு செய்ய காணப்படும் பல்வேறு முறைகள், வடிவங்கள் ஆகும்.
(உ – ம்) : உணவு – ரொட்டி, பாண்
- இது வரையறுக்கப்படாதது.
- நபருக்கு நபர் வேறுபடும்.
- சமூக கலாச்சார காரணிகளுடன் தொடர்புடையது.
பொருளாதாரத் தேவைகள் – பொருளாதாரம் அல்லாத் தேவைகள்
- பொருட்கள், சேவைகள் மூலம் நிறைவு செய்யப்படும் தேவைகள் பொருளாதாரத் தேவைகள் எனவும்
- பொருட்கள், சேவைகள் அல்லாத உளரீதியாக நிறைவு செய்யப்படும் தேவைகள் பொருளாதாரம் அல்லாத் தேவைகள் எனவும் பாகுபடுத்தப்படுகின்றன.
- பொருளியலில் பொருளாதாரத் தேவைகளே ஆராயப்படுகின்றன.
பயன்படு கேள்வி / செயற்படு கேள்வி
பொருள் அல்லது சேவை ஒன்றை கொள்வனவு செய்வதற்கான தேவை விருப்பத்துடன், கொள்வனவு சக்தியும், கொள்வனவு திட்டமும் காணப்படல் ஆகும்.
நுகர்வு – பயன்பாடு
- மனித தேவைகள், விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக பொருட்களையும், சேவைகளையும் பயன்படுத்துவது ‘நுகர்வு’ ஆகும்.
- பொருட்கள், சேவைகளை நுகர்வதன் மூலம் நுகர்வோன் அடைகின்ற உளரீதியான திருப்தியே “பயன்பாடு” ஆகும்.
பொருள் /பண்டம் இலவசப்பொருள்,பொருளாதாரப் பொருள் என வகைப்படுத்தப்படுகிறது.
இலவசப் பண்டம் / கட்டில்லாப் பண்டம் / பொருளாதாரம் அல்லாப் பண்டம் /சிக்கனப்பண்டம்
- இயற்கையிடமிருந்து விலையின்றி பெறப்படுகின்ற எல்லையற்ற நிரம்பலை கொண்ட பண்டங்கள் ஆகும்.
- அதாவது அமையச் செலவு இன்றியும், கிடைப்பனவு அருமையற்றவையாகவும் காணப்படும்.
(உ – ம்) : சூரிய ஒளி, காற்று
இதன் பண்புகள்
- அமையச் செலவற்றது.
- அருமையற்றவை.
- இயற்கையின் கொடையாக / பூச்சிய விலையில் பூரண நிரம்பலாக காணப்படும்.
- வளப்பயன்பாட்டு செலவு அற்றது.
- நுகர்வில் போட்டியற்றது.
பொருளாதாரப் பண்டம் /சிக்கனப்பண்டம்
- பொருளாதார வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்ற பண்டங்கள் ஆகும்.
- அதாவது அமையச் செலவுடைய, கிடைப்பனவு அருமைத்தன்மையாக காணப்படும் பண்டங்கள் ஆகும்.
(உ – ம்) : இலவசக் கல்வி, உணவு.
இதன் பண்புகள்
- அமையச் செலவுடையது.
- அருமையானவை.
- மனித முயற்சியால் உருவானது.
- வளப்பயன்பாட்டு செலவு உடையது.
- நுகர்வில் போட்டிக்குரியது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
குறித்த ஒரு நாட்டின் குறித்த காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் சேவைகளின் மொத்தப்பெறுமதி ஆகும்.
இதில் விவசாயம் ,கைத்தொழில் ,சேவை ஆகிய 3 துறைகளும் பங்களிப்புச்செய்கின்றன.இதில் அதிகளவு வருமானத்தினை சேவைத்துறையின் மூலமே பெற முடிகின்றது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு அதிகரித்தமைக்கான காரணங்கள்
• நுகர்வோரின் செலவிடக்கூடிய வருமானம் அதிகரித்தமை
• வாழ்க்கைப்பாணியில் ஏற்பட்ட மாற்றம்
• துணைச்சேவைகளின் அபிவிருத்தி
• சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி
• இலத்திரனியல் வணிகத்தின் விருத்தி