CGT 2021-45

Author : Admin Astan

Topic updated on 04/26/2023 09:15am

இவ்வினாவில் 1 தொடக்கம் 7 வரையில் காட்டப்பட்டுள்ள வாக்கியங்களுக்கு இடையே A, B, C, D, E ஆகிய வாக்கியங்கள் சரியான வரிசை ஒழுங்கில் அமையவில்லை. இந்த ஏழு வாக்கியங்களுக்கும் இடையே தருக்கரீதியாக வரிசை ஒழுங்கை கட்டியெழுப்புவதற்காக அவற்றின் மிகப் பொருத்தமான ஒழுங்குமுறையைத் தெரிவு செய்க.

1 – பலா மரம், வளர்வதற்கும் முதிர்ச்சியடைவதற்கும் நீரும், காற்றும், சூரிய ஒளியும் மாத்திரமின்றி போசணைக்கூறுகளும் அவசியமாகும்.
A – போசணைக்கூறுகள் இயற்கையாகவே உலோகங்கள், அல்லுலோகங்கள் என இரண்டு விதமானவையாகும்.
B – பலா மரம் அதன் வேர்களின் வழியே பொசுபரசு, பொற்றாசியம் ஆகிய இரண்டு வகைகளையும் அகத்துறிஞ்சும்.
C – வேர்களினால் NPK பெறப்படுவதோடு காபோவைதரேற்று எனப்படும் மற்றுமொரு பிரதான வகைக் கூறு, இலைகளில் உள்ள குளோரோபில் (பச்சையம்) உருமணிகள் மூலம் தொகுக்கப்படும்.
D – வளியில் அதிக அளவில் நைதரசன் அடங்கியுள்ளதெனினும் பலா மரம் அதன் நைதரசன் தேவையை வேர்கள் மூலமே பெற்றுக்கொள்கின்றது.
E – தாவரங்களுக்குத் தேவையான பிரதானமான உலோக, அல்லுலோகப் பதார்த்தங்கள் NPK எனக் குறிப்பிடப்படுகிறது.
7 – NPK உடன் வேர்கள் மூலம் உறிஞ்சப்படும் ஏனைய கனியுப்புக்கள் மற்றும் காபோவைதரேற்று ஆகிய அனைத்தும் பலா மரத்தின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் தேவையான சகல ஆக்க அலகுகளையும் தொகுப்பதற்குப் பயன்படுத்தப்படும்.

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply