36 தொடக்கம் 38 வரையிலான வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
மத்திய மகா வித்தியாலயமொன்றினது க.பொ.த.(உயர் தரம்)-2020 பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள், பொதுச் சாதாரணப் பரீட்சையில் மிகக்கூடுதலான புள்ளிகள் பெற்ற ஏழு பேர் புலமைப்பரிசில் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டனர். மிகக் கூடுதலான புள்ளிகள் பெற்ற இந்த ஏழு பேருள் பௌதீகவியல் துறை மாணவர்கள் இருவர், உயிரியல் துறை மாணவர் ஒருவர், தொழினுட்பவியல் துறை மாணவர்கள் இருவர், வணிகத்துறை மாணவர் ஒருவர், கலைத்துறை மாணவர் ஒருவர் அடங்கியுள்ளனர். அவர்களுள் எந்த இருவரதும் பொதுச் சாதாரண பரீட்சைப் புள்ளிகள் சமமானவை அல்ல.
✴ தொழினுட்பவியல் துறை மாணவர்களுக்கு முதலாம் இடமோ ஐந்தாம் இடமோ கிடைக்கவில்லை.
✴ வணிகத்துறை மாணவனுக்கு இரண்டாம் இடமோ ஆறாம் இடமோ கிடைக்கவில்லை.
✴ கூடிய புள்ளிகள் பெற்ற தொழினுட்பவியல் துறை மாணவன் பெற்ற இடத்துக்கும், வணிகத்துறை மாணவன் பெற்ற இடத்துக்கும் இடையே ஒரு மாணவன் மாத்திரம் உள்ளனர்.
✴ கலைத்துறை மாணவன் பெற்ற இடம், குறைந்தபுள்ளி பெற்ற தொழினுட்பத்துறை மாணவன் பெற்ற இடத்துக்கு பின்னர் வரும் அடுத்த இடமாகும்.
✴ உயிரியல் துறை மாணவன் பெற்ற இடம், உயர்புள்ளி பெற்ற பௌதிகவியல் துறை மாணவன்
பெற்ற இடத்துக்கு பின்னர் வரும் அடுத்த இடமாகும்.
தொழினுட்பவியற் துறை மாணவர்கள் இருவரும் எந்தெந்த இடங்களுக்குத் தெரிவாகினர்?