CGT 2020-46

Author : Admin Astan

Topic updated on 04/25/2023 08:55am

45, 46 ஆகிய வினாக்களில், 1, 7 ஆகிய வாக்கியங்களுக்கு இடையே உள்ள A, B, C, D,E ஆகிய வாக்கியங்கள் சரியான ஒழுங்கில் தரப்பட்டவில்லை. ஏழு வாக்கியங்களுக்கும் இடையே தருக்கரீதியான ஒழுங்குமுறையை உருவாக்கப் பொருத்தமான வரிசைப்படுத்தலைத் தெரிவுசெய்க.

1 – தென்னை, பலா, கித்துள் போன்ற தால வர்க்கத் தாவரங்கள் இலங்கையில் வளர்கின்றன.
A – தெங்குப் பயிர்ச்செய்கைச் சபை அண்மையில் ‘உலர் வலய தென்னை முக்கோணம்” எனும் பெயரில் மற்றுமொரு தென்னை முக்கோணத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
B – நாட்டின் ஒட்டுமொத்த தென்னை பயிரிடும் நிலப்பரப்பின் 56% வடமேல் மாகாணத்திலும் (குருணாகல், புத்தளம் மாவட்டங்கள்) மேல் மாகாணத்தின் ஒரு பகுதியிலும் (கம்பஹா மாவட்டம்) அமைந்துள்ளது.
C – இது மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது.
D – அப்பிரதேசம் ‘தென்னை முக்கோணம்” எனப்படுகிறது.
E – நாட்டின் சகல பகுதிகளிலும் தென்னைப் பயிர் காணப்பட்ட போதிலும் மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் தென்னை பயிரிடும் பிரதான பிரதேசங்கள் ஆகும்.
7 – நாட்டில் மொத்த தென்னைப் பயிர்ச்செய்கையைத் துரிதமாக விருத்தி செய்வதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டது.

 

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply