CGT 2020-38

Author : Admin Astan

Topic updated on 04/24/2023 03:48pm

36, 37, 38 ஆகிய வினாக்கள் பின்வரும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டவை.

ஒரு குறித்த ஆண்டில் க.பொ.த. (உயர் தர)ப் பரீட்சையில் வணிகப் பாடத்துறையில் நாட்டின் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்கள் முறையே யாழ்ப்பாணம், காலி, கொழும்பு, கம்பஹா, அம்பாறை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். அம்மாணவர் ஐவரின் பெயர்கள் A, B, C, D, E,  ஆகும். அவர்கள் தெரிவுசெய்த பட்டக் கற்கைநெறிகளாவன கணக்கீடு, சந்தைப்படுத்தல், நிதியியல், வணிகவியல், வங்கியியல் ஆகியன ஆகும். எனினும் இவை எவ்வகையிலும் அதே ஒழுங்குமுறைப்படி தரப்படவில்லை.

✴ முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் வணிகவியல் பட்டத்தைத் தெரிவுசெய்தார்.
✴ வங்கியியல் பட்டத்தை தெரிவுசெய்த மாணவன் பெற்ற இடம் வணிகவியல் பட்டத்தையும்
சந்தைப்படுத்தல் பட்டத்தையும் தெரிவுசெய்த மாணவர் பெற்ற இடங்களுக்கு இடைப்பட்டது.
✴ ஐந்தாம் இடத்தைப் பெற்ற மாணவன் நிதியியல் பட்டத்தைத் தெரிவுசெய்தார்.
✴ கம்பஹா மாவட்ட மாணவன் கணக்கீட்டுப் பட்டத்தைத் தெரிவுசெய்தார்.
✴ A, D ஆகியோர் அடுத்தடுத்த இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர்.
✴ E சந்தைப்படுத்தல் பட்டத்தைத் தெரிவுசெய்துள்ளார்.
✴ B பெற்ற இடம், C இனதும் E இனதும் இடங்களுக்கு இடைப்பட்டது.
✴ D பெற்ற இடம் 5 ஆகும்.

காலி மாவட்ட மாணவன் கற்கைக்காக தெரிவுசெய்த பட்டம் யாது?

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply