25, 26 ஆகிய வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
அம்பகாமம், தம்பகாமம் என்பன ஓர் ஆற்றினால் வேறாக்கப்பட்டுள்ள இரண்டு உப நகரங்களாகும். இந்த இரண்டு உப நகரங்களையும் இணைக்கும் பாதை 4 km நீளமானது. அதன் நடுவே பாலம் ஒன்று உள்ளது. இப்பாதையில், பாலத்தின் மீது 20 km h−¹ எனவும் பாலம் தவிர்ந்த ஏனைய இடங்களில் 60 km h−¹ எனவும் கதி எல்லைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இரண்டு வாகனங்கள் மு.ப. 9.00 மணிக்கு அம்பகாமத்தைக் கடந்து பின்பு தம்பகாமத்தை அடைகின்றன. மு.ப. 9.05 இற்கு தம்பகாமத்தை அடைந்த வாகனம் கதி எல்லையை மீறியமையால் பொலிசாரால் நிறுத்தப்பட்டது. மு.ப. 9.06 மணிக்கு தம்பகாமத்தை அடைந்த மற்றைய வாகனம் அவ்வாறு நிறுத்தப்படவில்லை. பாலத்தின் நீளம் பின்வருவனவற்றுள் எதுவாக இருக்க முடியும்?