இலாப நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் அமலன், துமிலன் ஆகியோரின் பங்குடமையில் 2012.03.31 இல் முடிவடைந்த வருடத்தில் இலாபப்பகிர்வின் பின்னர் பின்வரும் வழுக்கள் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. அமிலன் எடுப்பனவு செய்த ரூ. 3 000 பெறுமதியான சரக்கிற்கு பதிவுகள் எதுவும் இடம்பெறவில்லை. துமிலன் தனது சொந்த பணத்திலிருந்து செலுத்திய வியாபாரத்திற்கான மின் கட்டணம் ரூ. 2 000 ஆனது கணக்கேடுகளில் ரூ. 200 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வழுக்களைத் திருத்திய பின்னர் பங்காளர் இருவரது உரிமையாண்மையில் ஏற்படும் தாக்கம் யாது?