வாசன் இலாப நோக்கமற்ற நிறுவனமானது ஒரு நூல் நிலையம் அமைப்பதற்காக ரூபா 300 000 விசேட நன்கொடையாகப் பெற்றுக்கொண்டது. இதில் ரூபா 200 000 நூல் நிலையம் அமைப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டது. மேற்படி கொடுக்கல் வாங்கல்களின் பின் கட்டிட கணக்கு, திரண்ட நிதிக் கணக்கு, விசேட நன்கொடைக் கணக்கு போன்றவற்றில் காணப்படும் மீதிகள் முறையே எத்தொகைகளைக் காட்டுகின்றன.