வியாபாரமொன்றின் வரைபு நிதிக் கூற்றுக்களைத் தயாரித்ததன் பின்பு பின்வரும் வழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
(i) கடன்பட்டோரிடமிருந்து பெறப்பட்ட காசு ரூபா 18 500 ஆனது கடன்பட்டோர் கணக்கில் ரூபா 15 800 ஆகப் பதியப்பட்டுள்ளது.
(ii) கடன்விற்பனை ரூபா 25 000 ஆனது விற்பனைக் கணக்கில் ரூபா 2 500 என செலவு வைக்கப்பட்டுள்ளது.
(iii) விற்பனைத் திரும்பல் ரூபா 3 000 ஆனது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வழுக்கள் காரணமாக நிறுவனத்தின் இலாபம் எவ்வளவு தொகையால் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது?