கம்பனியொன்றின் நிதிவருடம் 31.03.2012 இல் முடிவடைந்தது. இக்கம்பனியானது 01.04.2011 இல் மீள் விற்றலுக்காக ரூபா 40 000 க்கு பொருட்களைக் கடனுக்கு கொள்வனவு செய்ததுடன் ரூபா 20 000 கிரயமான தளபாடங்களைக் காசுக்குக் கொள்வனவு செய்துள்ளது. குறித்த நிதி வருடத்தில் ரூபா 2 000 கழிவு நீக்கி மீள் விற்றலுக்காக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களுக்கான பணத்தின் 50% காசோலை மூலம் கொடுத்து தீர்க்கப்பட்டதுடன் உரிமையாளர் ரூபா 1 000 கிரயமான பொருட்களை சொந்த உபயோகத்துக்காக எடுத்துள்ளார். தளபாடங்களுக்கு 10% பெறுமானத் தேய்விடப்பட்டது. கீழே தரப்பட்டுள்ள சமன்பாடுகளில் எது கொடுக்கல் வாங்கல்களின் தாக்கத்தைக் காட்டும்?