குறித்த நாடு ஒன்றிலே கடந்த ஆண்டு போக்குவரத்து விபத்துகள் அதிக அளவில் ஏற்பட்டதால் அந்த நாட்டின் அரசாங்கம் இந்த ஆண்டு மோட்டார் வாகனங்களின் மீதான உத்தேச இறக்குமதி வரிக்குறைப்பை நடைமுறைப்படுத்துவதில்லையென தீர்மானித்தது. இவ்விடயம் தொடர்பாகத் தனிப்பட்ட குழு ஒன்று பின்வரும் அவதானிப்புகளைச் செய்தது.
(A) முந்திய ஆண்டுகளை விடச் சென்ற ஆண்டு போக்குவரத்து விபத்து வீதம் குறிப்பிடத்தக்க அளவு கூடுதலாக இருக்கவில்லை.
(B) விற்பனையாளர்கள் விலைகளைக் குறைத்த போதெல்லாம் மோட்டார் வாகனங்களின் விற்பனைகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கவில்லை.
(C) பெரும்பாலான போக்குவரத்து விபத்துகள் பிரதானமாக மனிதத் தவறினால் ஏற்பட்டன.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அடிப்படையாக அமைந்த வாதத்தற்கு மேலே உள்ள அவதானிப்புகளில் எது ஆதரவாக அமையவில்லை?